பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை429

563.
வம்மி னமரங்காண் மன்றுடையான் வார்கழல்கண்
டுய்ம்மி னுறுதி பிறிதில்லை - மெய்ம்மொழிமற்
றென்மொழி பிழையா தாகும்
பின்வழி நுமக்குப் பெரும்பயன் றருமே.

        இது வாயுறை வாழ்த்து மருட்பா.    
(83)

564.
வாழ்த்துமின் றில்லை நினைமின் மணிமன்றம்    
தாழ்த்துமின் சென்னி தலைவற்கு - வீழ்த்த    
புறநெறி யாற்றா தறநெறி போற்றி    
நெறிநின் றொழுகுதிர் மன்ற    
துறையறி மாந்தர்க்குச் சூழ்கட னிதுவே.    

        இது செவியறிவுறூஉ மருட்பா.        
(84)

சிதம்பரச் செய்யுட்கோவை முற்றிற்று.


    563. நமரங்காள்: 506, 520. உயிம்மின் - பிழையுங்கள்.

    564. தலைவற்குச் சென்னி தாழ்த்துமின். வாழ்த்துமினென வாக்காலும், நினைமினென மனத்தாலும், சென்னிதாழ்த்துமின் எனக் காயத்தாலும் செய்யும் தொண்டுகளைக் கூறியது முக்கரணத்தாலும் வழிபடல் வேண்டுமென்று புலப்படுத்தியபடி. புறநெறி ஆற்றாது - அறத்தாறல்லாத நெறியினின்று செயல் புரியாமல். துறை அறி மாந்தர் - தாம் ஒழுகும்வழி இஃதென அறிந்த அறிஞர்.