சந்த விருத்தம் 22. | குருமணி வெயிலவிட மரகத நிழல்விரி | | குன்றே நின்றூதும் | | குழலிசை பழகிய மழைமுகி லெழவெழு | | கொம்பே வெம்பாசம் | | மருவிய பிணிகெட மலைதரு மருமைம | | ருந்தே சந்தானம் | | வளர்புவ னமுமணர் வருமரு மறையின்வ | | ரம்பே செம்போதிற் |
| கருணையின் முழுகிய கயறிரி பசியக | | ரும்பே வெண்சோதிக் | | கலைமதி மரபிலொ ரிளமதி யெனவளர் | | கன்றே யென்றோதும் |
| திருமகள் கலைமக டலைமகண் மலைமகள் | | செங்கோ செங்கீரை | | தெளிதமிழ் மதுரையில் வளருமொ ரிளமயில் | | | 22. (சந்தக்குழிப்பு.) தனதன தனதன தனதன தனதன தந்தா தந்தான,
(அடி, 1) குரு - நிறம். மணிகள் அம்பிகை யணிந்த ஆபரணங்களிலுள்ளவை. முகில்: திருமால், எழ எழு கொம்பு - முன்னே வரப் பின்வந்த பூங்கொம்பு போல்வாள்; அவர் தங்கையென்றபடி.
(2) மலைமகளாதலாலும் பிறவிப் பிணி கெடச் செய்தலாலும், மலைதருமருந்தே யென்றார்; மருந்து - பச்சிலை; மலை மருந்து சிறந்தத்து. சந்தானம் வளர் புவனம் - சந்தான மென்னும் தரு வளர்கின்ற தேவலோகம்; சந்தானம் - ஐந்து தருக்களில் ஒன்று. செம்போதென்றது திருமுகத்தை.
(3) கயல் என்றது கண்களை. கன்றே - மான்கன்று போல்வாய்.
(4) திருமகளுக்கும் கலைமகளுக்கும் தலைமகள்; விளி. செங்கீரையென்றது செங்கோஙென மருவியது; அதன்பின் ஆடியருளே யென்பது எஞ்சி நின்றது.
|