வேறு 23. | சங்குகி டந்தத டங்கைநெ டும்புயல் | | தங்காய் பங்காயோர் | | தமனிய மலைபடர் கொடியென வடிவுத | | ழைந்தா யெந்தாயென் |
| றங்கணெ டும்புவ னங்கடொ ழுந்தொறும் | | அஞ்சே லென்றோதும் | | அபயமும் வரதமு முபயமு முடையவ | | ணங்கே வெங்கோபக் |
| கங்குன்ம தங்கய மங்குல டங்கவி | | டுங்கா மன்சேமக் | | கயல்குடி புகுமொரு துகிலிகை யெனநின | | கண்போ லுஞ்சாயற் |
| செங்கய றங்குபொ லன்கொடி மின்கொடி | | செங்கோ செங்கீரை | | தெளிதமிழ் மரையில் வளருமொ ரிளமயில் | | | 23. (சந்தக் குழிப்பு.) தந்தன தந்தன தந்தன தந்தன தந்தா தந்தான தன தன தனதன தனதன தனதன தந்தா தந்தான.
(அடி, 1) புயல் - திருமால். தங்காய் - தங்கையே. தமனிய மலை - சிவபெருமான். எந்தாய் - எம் தாயே (553.)
(2) அம் கண் - அழகிய இடத்தையுடைய. அபயமும் வரதமுமாகிய உபயமும்; உபயம் - இரண்டு.
(3) மதகய மென்றது மதங்கயமெனச் சந்தம் நோக்கி நின்றது. மதங்கயமாகிய மங்குல்; மங்குல் - இருள்; மன்மதனுக்கு இருள் யானை. துகிலிகை - துவசம். (பி-ம்.) ‘துகிலிகையனநின்.’
(3-4) பொலன் கொடியையுடைய மின் கொடி, காமனுடைய கயற்கொடி போன்ற கயற்கொடியை யுடையாயென்றபடி. எனத் தங்கு என இயைக்க. அங்கயற்கண்ணம்மை யதலின், ‘கண்போலுஞ் சாயற் செங்கயல்’ என்றார்.
|