3.தாலப் பருவம்
ஆசிரிய விருத்தம் 24. | தென்னத் தமிழி னுடன்பிறந்த | | சிறுகா லரும்பத் தீயரும்பும் | | தேமா நிழற்கண் டுஞ்சுமிளஞ் | | செங்கட் கயவாய்ப் புனிற்றெருமை |
| இன்னம் பசும்புற் கறிக்கல்லா | | இளங்கன் றுள்ளி மடித்தலநின் | | றிழிபா லருவி யுவட்டெறிய | | எறியுந் திரைத்தீம் புனற்பொய்கைப் |
| பொன்னங் கமலப் பசுந்தோட்டுப் | | பொற்றா தாடக் கற்றைநிலாப் | | பொழியுந் தரங்கம் பொறையுயிர்த்த | | பொன்போற் றொடுதோ லடிப்பொலன்சூட் |
| டன்னம் பொலியுந் தமிழ்மதுரைக் | | கரசே தாலோ தாலேலோ | | அருள்சூற் கொண்ட வங்கயற்கண் | | |
24. (அடி, 1) தென்னந் தமிழ் - தென்றமிழ்; அம்; சாரியை. சிறுகால் - தென்றல். தென்றற்காற்று வீசுங் காலத்து மாமரம் சிவந்த தளிர் விதுவதைச் ‘சிறுகாலரம்பதி தீயரும்பும்’ என்று குறித்தார்; “திருந்துந் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா” (நன்னெறி, 19) மாந்தரிளுக்குத் தீ உவமை (ஐங். 349) கயவாய் - ஆழமான வாய்; (பி-ம்.) ‘கருவாய்’. புனிறு - ஈன்ற அணிமை.
(2) உவட்டெறிய - பெருக்கெடுப்ப.
(3) பசுந்தோட்டுப் பொற்றாடு - இளைய இதழிலுள்ள பொன் போன்ற பூந்தாது. தரங்கம் பொறையுயிர்த்த பொன் - கடலாற் பெறப்பட் திருமகள். சூட்டு - உச்சிக் கொண்டை.
(4) ‘தாலோ தாலேலோ’ என்றது குழந்தையைத் தாலாட்டுவார் கூறும் ஒருவகை வாய்ப்பாடு. தம் நாவை ஆட்டி இதனைப் பாடுவதனால் இதற்குத்தாலாட்டென்னும் பெயர் வந்தது; தால் - நா; தாலாட்டுப் பருவமென்றது தாலப் பருவமென நின்றது.
எருமை தன் கன்றை நினைந்து சொரிந்த பாலால் பொய்கை பாற்கடல் போலத் தோன்றத் தாமரைத் தாதினிடையே ஆடப் பொன்னிறம் பெற்று அம்மலரிலே இருந்த அன்னம் திருமகளைப் போலத் தோற்றியது.
|