10 | அஞ்சிறைச் சுதைநிறச் செஞ்சூட் டன்னமும் | | செம்மயிர்க் கருங்கண் வெள்ளெயிற் றேனமும் | | ஆகுபு தனித்தனி யலமர நிவந்த | | மீகெழு பரஞ்சுடர் வெளிப்பட் டம்ம | | எம்மனோர் போல வினிதெழுந் தருளிக் | 15 | கைம்மா றற்ற கணக்கில்பே ரின்ப | | மோனவாழ் வளிக்கு ஞான தேசிகன் | | விரிகதிர் பரப்பு மரகதத் தகட்டிற் | | சுடர்செய் செம்மணி யிடையிடை பதித்தெனப் | | பாசடைப் பரப்பிற் பதும ராசிகள் | 20 | சேயிதழ் விரிக்குஞ் செழுமல ரோடையும் | | அண்டகோ ளகையு மெண்டிசா முகமும் | | கோட்டுடைத் தடக்கை நீட்டிளந் தென்னச் | | சேட்பட நிவந்த செண்பகா டவியும் | | கால்கிளர் விசும்பிற் கற்பகா டவிக்கு | 25 | வேலியிட் டன்ன வியன்மணிப் புரிசையும் | | மருங்குசூழ் கிடந்த வண்டமிழ்க் கமலைப் | | பெரும்பதி புரக்கும் பேரருட் குரிசில் |
கும் தொழில். பொதுக்கடிந்து அளிக்கும் - தனியுரிமை கொண்டு பாதுகாக்கும். கமலக் கண்ணன் - திருமால்.
(10-13) சுதை நிறம் - வெண்ணிறத்தையுடைய. செஞ்சூடு - சிவந்த உச்சிக் கொண்டையையுடைய. ஏனம் - பன்றி. அலமர - சுழலா நிற்ப. நிவந்த - உயர்ந்து நின்ற. பரஞ்சுடர் - சிவமாகிய மேலான ஒளி.
(14-6) எம்மனோர்போல எழுந்தருளி - மானிடராகிய எம்மைப் போலத் தானும் ஒரு மானிடத்திருவுருவங் கொண்டருளி (567); “ஈறிலாத நீ யெளியை யாகிவந் தொளிசெய் மானிடமாக நோக்கியும்” (திருவா. திருச்சதகம், 91). கைம் மாறற்ற .......... தேசிகன்: “அந்த மொன்றில்லா வானந்தம் பெற்றேன் ........... யானில னிதற்கொர்கைம்மாறே” (திருவா. கோயிற்றிருப்பதிகம், 10).
(17-27) திருவாரூரின் சிறப்பு.
பதுமராசிகள் - தாமரை மலர்த் தொகுதிகள். தாமரையிலைக்கு மரகதத் தகடும், அதன் மலருக்கு மாணிக்கமும் உவமைகள். அண்டகோளகை அண்டமாகிய உருண்டை. கோட்டுடைத் தடக்கை நீட்டி அளந்தென்ன - கொம்புகளாகிய தன்னுடைய பரந்த கைகளை நீட்டி யளந்தாற்போல. விசும்பு - தேவலோகம். புரிசை - மதில். கமலை - திருவாரூர். தருமைத் திருஞான சம்பந்த தேசிகருடைய குருமூர்த்தி திருவாரூர் ஞானப்பிரகாச தேசிகர். பின்வந்த தேசிகரையும் முன்புள்ள ஆசிரியர்களாகவே நினைந்து
|