பக்கம் எண் :

432குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

நான்மறை நவின்ற நற்பொரு ளிவையென
மோனவா சகத்தான் முப்பொரு ணவிற்றுபு
30
நன்னலம் புரியு ஞானப் பிரகாசன்
இன்னருள் பழுத்த செந்நெறிச் செல்வன்
திருக்கிளர் ஞானத் திருந்திழைக் கணியாம்
அருட்பெருஞ் சைவத் தருங்கல னாப்பண்
ஆசற விளங்கு மாசி லாமணி
35
அமண்மா சறுத்த கவுணியர் பெருந்தகை
பிள்ளைமை விடுத்த தள்ளரும் பருவத்
துள்ளதன் படிவ முணர்த்துவ கடுப்ப
மாநிலத் தமர்ந்த ஞானசம் பந்தன்
பொன்னடிக் கமலஞ் சென்னிவைத் திறைஞ்சுதும்
40
இருகால் சுமந்த வொருபெருஞ் சேவகத்
தைம்புலக் களிறுந் தம்புல திழுப்ப
ஊனிடைப் பிறவிக் கானகத் துழலா
தேனைய முத்திநா டெய்தவோர்
ஞான வாரண நல்குதி யெனவே.    
(2)

வழிபடுதல் மரபாதலின் இங்கே மாசிலாமணி தேசிகரை ஞானப்பிரகாச தேசிகராகவே கூறினார்.

    (28-31) முப்பொருள் - திரிபதார்த்தம்; பதிபசுபாசம். ஞானப்பிரகாசன் - கமலை ஞானப் பிரகாசர்.

    (32-4) ஞானத் திருந்திழைக்கு - ஞானமாகிய பெண்ணுக்கு. அவளுக்கு ஆபரணமாகிய சைவத்தின் நடுவில் விளங்கும் நாயகமணியாகிய மாசிலாமணி.

    (35-9) தரும்புரத்திற் கோயில் கொண்டெழுந்தருளி யிருப்பவரும் கமலை ஞானப் பிரகாச தேசிகருக்கு மாணாக்கருமான ஆசிரியர் திருஞான சம்பந்த தேசிகரென்னும் திருநாமமுடையராதலின் அவ்வியைபுபற்றித் திருஞானசம்பந்த மூர்த்தியே தம் பிள்ளைத் திருக்கோலத்தை நீத்து முதிய கோலத்தில் வந்தாற் போன்றவரென்பர். அமண்மாசு - சமண சமயமாகிய குற்றம். கவுணியர் பெருந்தகை - திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்.

    (40-44) இருகால் சுமந்த - இரண்டு கால்களாற் சுமக்கப் பெற்ற. சேவகம் - யானை துயிலுமிடம்; புலன்களைக் களிறென்ற தற்கேற்ப உடலை இங்ஙனம் உருவகம் செய்தார். ஐம்புலக்களிறு - ஐம்பொறிகளாகிய யானைகள்; “உரனென்னுந் தோட்டியானோரைந்துங் காப்பான்” (குறள், 24); “ஐம்புல வேழத்தின் வெந்தொழில் வீய” (ஞானாமிர்தம்.) தம் புலத்து இழுப்ப - தமக்குரிய இடத்தின் கண்ணே இழுக்க.