பக்கம் எண் :

434குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

சிற்றிடை படைத்த பேரமர்க் கண்ணியர்
கரைகொன் றிரங்குந் திரைசெய்நீர்ப் பட்டத்து
5
மைவிழி சேப்பச் செவ்வாய் விளர்ப்பக்
கருங்குழல் சரிய வெள்வளை கலிப்பச்
சீராட் டயரு நீராட் டயர்ந்து
புலவியிற் றீர்ந்து கலவியிற் றிளைக்கும்
நீரர மகளிர் பேரெழில் காட்ட
10
மருதம்வீற் றிருந்து பெருவளஞ் சுரக்கும்
தருமையம் பதிவாழ் சற்குரு ராய
ஒள்ளொளி பரப்பும் வெள்ளிவே தண்டத்
தொருபாற் பொலிந்த மரகதங் கவினச்
சுடர்விடு செங்கதிர்க் கடவுண்மா மணிக்கு
15
விளங்கெழின் மிடற்றோர் களங்கமுண் டென்பவக்
காசுலா மலினங் கரந்தகா ரணத்தால்
மாசிலா மணியென வண்பெயர் நிறீஇ
மேன்மையோ டமர்ந்த ஞானசம் பந்த
ஈண்டுனைத் தமியனேன் வேண்டுவ தியாதெனின்
20
அந்நிய மென்று மநநிய மென்றும்
இந்நிலை யிரண்டு மெய்திற் றென்றும்
பல்வே றுரைக்குநர் சொல்வழிப் படாது
தவ்வியம் பழுத்த சைவசித் தாந்தத்
திறவா நிலைமைபெற் றின்பமார்ந் திருக்கும்
25
பிறவா நன்னெறி பெறப்புரி வதுவே


(தஞ்சைவாணன். 72.) சேப்ப - சிவப்ப. நீரர மகளிர் - நீரில் வாழும் தெய்வ மகளிர். நீராடியதால் உண்டான வேறுபாடுகள் கலவியினால் உண்டாவனவற்றை ஒத்தன. சற்குருராய: 569.

    (12-5) சிவபெருமானை ஒருமணியாக உருவகம் செய்வார்.

    வெள்ளி வேதண்டம் - கயிலைமலை. மரகதமென்றது உமாதேவியாரை. கடவுண்மாமணி - சிவபெருமான்.

    (16-8) காசு - குற்றம். மலினம் - கங்கம். மாசு இலா மணி - களங்கமில்லாத மணி.

    (19-25) சைவ சித்தாந்தத்தைப் பின்பற்றி நன்னெறியடைதலை வேண்டுகின்றார்.

    அந்நியம் - பேதம். அநநியம் - அபேதம். இந்நிலை யிரண்டும் எய்திற்றென்றது பேதாபேதத்தை. பல்வேறு உரைக்குநர் - பல்வேறு வகையாகக் கூறும் சமயவாதிகள். திவ்வியம் - தெய்வத் தன்மை. இறவா நிலைமை - நீங்காத நிலைமை. புரிவதுவே தமியனேன் வேண்டுவது.