| அங்கது புரிதற் கரிதெனி னிங்கொரு | | சனனமியான் வேண்டுவ தினிதரு ளெனக்கே, அதுவே | | ஐந்தரு நிழற்கீ ழரசுவீற் றிருக்கும் | | இந்திர னாகிவாழ்ந் திருப்பதோ வன்றே | 30 | மலரோ னாகி மன்னுயிர்த் தொகுதி | | பலர்புகழ்ந் திசைப்பப் படைப்பதோ வன்றே | | அடலரா வணையி லறிதுயி லமர்ந்த | | கடவுளா யுலகங் காப்பதோ வன்றே, அவைதாம் | | ஆரா வின்பமென் றரும்பெயர் பெறினும் | 35 | வாரா வல்வினை வருவிக் கும்மே | | அன்னவை யொழியமற் றென்னைகொல் பிறவெனின் | | விழுத்தகு கல்வியு மொழுக்கமு மிலராய்ப் | | பழிப்புள ராயினு மாக வழுத்துநின் | | பொன்னடித் துணைசேர் நின்னடித் தொண்டர் | 40 | திருவமு தார்ந்து தெருக்கடை யெறிந்த | | பரிகல மாந்தியிப் பவக்கட லுழக்கும் | | வரனுடை ஞமலி யகிநின் | | அருளையு மயரா தவதரிப் பதுவே. |
நேரிசை வெண்பா 570. | அவமாசி லாமனத்தார்க் காருயிரா ஞானோற் | | பவமாசி லாமணிச்சம் பந்தா - தவமார் | | ததியருளத் தானேநின் சந்நிதிப்பட் டேற்குக் | | |
(28-35) இந்திரபதவி முதலியவற்றில் விருப்பின்மையை உணர்த்துகின்றார்.
ஐந்தரு - ஐந்துவகைக் கற்பக விருட்சங்கள். அவைதாம் - இந்திரன், பிரமன், திருமால் என்பார் பதவிகள்; “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு” (திருவா.) ஆரா இன்பம் - தெவிட்டாத இன்பம்.
(37-43) அடியார் பெருமை புலப்படுத்தப்படும்.
பரிகலம் - பரிகலசேடம்; எச்சில்; உண்கலத்தைக் குறிக்கும் இச்சொல் இங்கே ஆகுபெயராய் நின்றது. ஞமலி - நாய். அயராது - மறவாமல். அவதரிப்பது - பிறப்பது.
அவதரிப்பதுவே (43) ஆகிய ஒரு சனனம் வேண்டுவது அருள் (27) என்க.
570. ஞானோற்பவ - ஞானத்தை உண்டாக்குவோய். ததியர் = ததீயர் - அடியார்; இச்சொல் வைணவர்களிற் பெருவழக்கு. கதியை அருளத்தான் கடன்.
|