| புருட நாமம் புனைந்தன மாயினும் | 20 | அத்தநிற் குறிப்பிற் சத்திகள் யாமே | | புருடனைச் சத்தியிற் புணர்த்தனை யன்னதற் | | கொருகாட் டென்ப புருடோத் தமனே | | உன்னுட னெம்மையு மொப்பெனப் படுத்து | | முன்னர்க் கூறிய முறைமையிற் சிற்சில | 25 | முழுவது மொவ்வா தொழியினு மொழிக | | உயர்ந்தோன் றலைவ னொத்தோட் புணரினும் | | இழிந்தோட் புணரினும் மிழிபெனப் படாதே | | ஆதலின் யாமுனைக் காதலித் தனமாற் | | காதலி னெமையருட் கைப்பிடித் தருளி | 30 | ஒருவரு முணராப் பரம வீட்டில் | | இருளறை திறந்த பெருவெளி மண்டபத் | | துயர்நா தாந்தத் திருமல ரமளியிற் | | புளகமெய் போர்ப்ப மொழிதடு மாற | | உள்ளொலி நாதப் புள்ளொலி முழங்க | 35 | ஞானவா ரமுத பானம தார்ந்து | | கருவிகள் கழன்று பரவச மாகிப் | | பரமா னந்தப் பரவையுட் படிந்து |
(19) புருடனென்னும் நாம்ம் ஆன்மாவுக்குரியது. (பி-ம்.) ‘புருடநாமமும்’.
(19-20) புருடனென்னும் பெயரை நாங்கள் உடையேமாயினும், நின்னை நோக்கியவிடத்து நாங்கள் சக்திகளே.
(21-2) புருடனைச் சக்தியைப் போலத் தொடர்பு படுத்தினை. காட்டு - உதாரணம். புருடோத்தமன் - திருமால்.
(23) (பி-ம்.) ‘ஒப்பனைப்படுத்து’.
(26-7) இவ்வடிகளிலுள்ள செய்தி, “ஒன்றே வேறே யென்றிரு பால்வயின், ஒன்றி யுயர்ந்த பால தாணையின், ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப, மிக்கோனாயினுங் கடிவரையின்றே” (தொல். களவு, 2) என்னும் சூத்திரத்தை நினைந்து கூறியது.
(33) புளகம் - மயிர்க்கூச்செறிதல்.
(30-37) இவ்வடிகளில் பேரின்பவுணர்ச்சியைச் சிற்றின்பம் போலத் தோற்றும் வண்ணம் சொற்றொடரமைத்தனர்.
|