| நல்வளம் பதிவாழ் ஞானசம் பந்த | | பாசமா மிருட்கோர் படர்மணி விளக்கெனும் | | மாசி லாமணித் தேசிக ராய | 25 | சாற்றுவன் கேண்மதி மாற்றமொன் றுளதே | | மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணீர் வார | | மொழிதடு மாற வுழுவலன் பலைப்பச் | | சத்திநி பாத்த் தன்மைவந் தடைந்தோர்க் | | கப்பொருள் புரிதற் கதுபொழு தாகலின் | 30 | மெய்ப்பொரு ளுணர்த்துதல் வியப்பெனப் படாதே | | சொற்றமிழ் விரகன் றுணைக்கண் சாத்த | | முற்றுணர் கேள்வியர் பற்பல ராயினும் | | கைசொலக் கேட்குங் கட்செவி மூங்கைக் | | குய்வகை புணர்த்த தொருவியப் பாகலின் | 35 | அன்னது கடுப்பநின் சந்நிதி விசேடத் | | தின்னருள் பெறாதவர் யாவரு மிலரென | | வியப்புள தாக நயப்பதொன்றுளதே | | அனையதீங் கென்னென வினவுதி யாலெனிற் | | கதலித் தண்டிற் பொதிதழற் கொளீஇப் | 40 | பற்றா திருப்பினும் பைப்பைய மூட்டுபு | | மற்றொரு சூழ்ச்சியிற் பற்றுவித் தாலென |
(23) இருட்கு - இருளை அழித்தற்கு. மணி விளக்கு - இரத்தின தீபம்.
(26-30) சத்திநிபாதத்தை அடைந்தவர்க்கு உண்மைப் பொருளை உபதேசித்தல் வியப்பு அன்று; செய்யவேண்டுவதே.
(31-5) இவ்வடிகளில் திருவாதவூர்ர் சிதம்பரத்தில் ஈழத்தரசனுடைய மூங்கைப் பெண்ணைப் பேசவைத்த செயல் கூறப்படுகின்றது.
(31) தமிழ் விரகன் - திருவாதவூரர்; இத்திருநாமம் திருஞான சம்பந்தர்க்கே பெரும்பாலும் வழங்குகின்றது.
(33) கட்செவி - கண்ணையே காதாக உடைய. மூங்கை - ஊமைப் பெண். ஊமைகள் கையாற் சொல்லக் கண்ணாற் கேட்டல்: “கையி னாற் சுலக் கண்களிற் கேட்டிடும், மொய்கொள் சிந்தையின் மூங்கையுமாயினேம்” (சீவக. 997).
(35) கடுப்ப - ஒப்ப.
(39) கதலித்தண்டு - வாழைத்தண்டு.
(40) பைப்பைய - மெல்ல மெல்ல.
(41) சூழ்ச்சியின் - ஆலோசனையினால்.
|