பக்கம் எண் :

பண்டார மும்மணிக்கோவை447

ஒருசிறி தெனினும் பருவமின் றாயினும்
பவவிரு டுரந்தருள் பதியத்
தவமில் பேதையேன் றனக்கருள் வதுவே.
(17)

நேரிசை வெண்பா
582.
தன்னேரி லாஞான சம்பந்தன் றாளடைந்தார்க்
கென்னே யிருள்வெளியா மென்பரால் - அன்னோன்
அருளாத போதுவெளி யாயிருந்த வெல்லாம்
இருளா யிருந்த வெனக்கு.    
(18)

கட்டளைக் கலித்துறை
583.
என்செய லாலொன்றும் யான்செய்வ
தில்லை யெனக்கவமே
புன்செய லாம்வினைப் போகமுண்
டாவதென் போதமில்லேன்
தன்செய லாயவெல் லாமாசி
லாமணிச் சம்பந்தநின்
நன்செய லாயினு மென்செய
லர்செய்யு நானென்பதே.

நேரிசையாசிரியப்பா
584.
நான்மறைக் கிழவ நற்றவ முதல்வ
நூன்மறை பயின்ற நுண்மைசா லறிஞ
சொற்சுவை பழுத்த தொகைத்தமிழ்க் கவிஞ
கற்றவர் வியக்குங் காவியப் புலவ
5.
செவிதொறுஞ் செவிதொறுந் தெள்ளமு தூட்டுபு
கவிஞர்வயி னிரப்புங் கல்விப் பிரசங்க
வெள்ளிடைத் தோன்றா துள்ளத் துணர்த்தவும
சேய்நிலை நின்று திருக்கண் சாத்தவும்
சாயா மும்மலச் சகலரே முய்ய

    (38-44) அனையது அருள்வதுவே என்க.

    582. இருள் - அஞ்ஞானம். வெளி - ஞானம். அவன் திருவருளால் இருளாயின வெல்லாம் வெளியாயின என்பது கருத்து; இருள் - உலகம்; வெளி - முத்தி; “மெய்யைப் பொய்யென்றான் வெளியை நல்ல வீடென்றான்” என்றார் ஒரு பெரியார்.

    583. அடியேன் செயலெல்லாம் நின்செயலாயிருப்ப வினைப்போகத்தை அடியேன் அனுபவித்தற்குக் காரணம் அடியேனுக்குள்ள அகங்காரமே.

    584. (5) கேட்பவர் செவிகள் தோறும்.

    (6) வயின் - வயிறு, இடம்: சிலேடை.

    (7) வெள்ளிடை - வெளியிடத்தே. உள்ளத்து உணர்த்துதல்; விஞ்ஞானாகலர் திறத்தில்.

    (8) திருக்கண் சாத்துதல், பிரளயாகலர் திறத்தில்.