பக்கம் எண் :

பண்டார மும்மணிக்கோவை449

30.
என்பொருட் டாயினு மென்பொருட் டன்றிது
நின்பொருட் டொருபொரு ணிகழ்த்துவன் கேண்மோ
வறிஞ னோம்பிய செறுவொன் றேய்ப்பப்
பருவ நோக்காப் பவந்தொறும் பவந்தொறும்
இருவினைப் போகமு மெற்கொண் டார்த்துபு
35.
மற்றென் னுருக்கொடு முற்றனை யாலினித்
தாகமின் றாகலிற் பாகமின் றெனக்கென
அருளா தொழியினும் பரிபவ நினக்கே
சேய்முகம் பாராள் சினந்தன ளேகினும்
போயெடுத் தாற்றுமத் தாய்மீட் டன்றே
40.
ஆதலி னெனைப்போ லடிக்கடி தோன்றலை
ஈதியா லின்னரு ளின்னண மெனக்கே
சமையந் தீர்ந்த தனிப்பொரு டெரித்தற்
கமையந் தேர்கலை யருளுதி யாயினும்
எண்ணீ ராண்டைக் கிலக்கமிட் டிருந்த
45.
அண்ணலங் குமரற் காருயிர் தோற்ற
கடாவிடை யார்திபாற் கண்டும்
அடாதென மொழிகுந ரார்கொன்மற் றுனையே.    
(20)

    (32) செறு - வயல். வறிஞனோம்பிய செறு: “வையக முழுவதும் வறிஞ னோம்புமோர், செய்யெனக் காத்து” (கம்ப. அரசியற். 12); “மிடிய னொருசெய் விளையக் காக்குஞ் செயல் போல” (பிரபு. மாயை யுற்பத்தி. 49.)

    (33) பருவம் நோக்கா - என்னுடைய பக்குவத்தை நோக்கி.

    (35) உருக்கொடும்; உம்மை இறந்தது தழுவியது.

    (36) தாகமின்று - அடியேனுக்கு விருப்பமில்லை. பாகம் - பக்குவம்.

    (37) பரிபவம் - அவமானம்.

    (38) சேய் - பிள்ளை.

    (39) ஆற்றும் - ஆற்றுவாள்.

    (41) இன்னருள் ஈதி. இன்னணம் - இப்பொழுதே; இச் சொல் இப்பொருளிற் பயில வழங்கவில்லை; இன்னவண்ணமென்பதன் விகாரமெனினும் ஆம்.

    (46) கடாவிடை - எருமைக்கடாவாகிய விடை; விடை, எருமையின் ஆணுக்கும் வரும். (பி-ம்.) ‘ஊர்தியாற்’.

    (47) அடாது - பொருந்தாது.

    (42-7) விதியை விலக்கி அடியார்க்கு அருள் செய்தலை மார்க்கண்டேயருக்காக உதைக்கப்பெற்ற யமனிடத்தே கண்டும்.