பக்கம் எண் :

பண்டார மும்மணிக்கோவை451

அருத்தியோ டெம்மைநம் முருத்திர கணங்கள்
தெரித்துமற் றிவ்வா றருச்சனை புரிதிரென்
றங்கையற் கண்ணி பங்கில்விற் றிருந்த
10.
செக்கர் வார்சடைச் சொக்கநா யகனை
ஈரெண் டிறத்துப சானமும் வாய்ப்பப்
பூசனை புரியுந் தேசிக ராய
மழைக்குலந் தழைப்பத் தழைத்ததீம் பலவின்
வேரிடைப் பழுத்துப் பாரினுட் கிடந்த
15.
முட்புறக் கனிகள் விட்புறக் காண்டலும்
சிறுகண் மந்தி குறிவழிச் சென்று
கீண்டுபொற் சுளைபல தோண்டுவ தம்ம
முற்பக லொருவர் பொற்குட நிரம்பப்
புதைத்தனர் வைத்த நிதிக்குழா மனைத்தும்
20.
வஞ்சகம் பழகு மஞ்சனக் கள்வர்
கண்டுகண் டெடுக்குங் காட்சித் தன்ன
தண்டலை வளைஇத் தடமதி லுடுத்த
தேசுலாங் கமலைத் திருநகர் புரக்கும்
மாசி லாமணி ஞானசம் பந்த
25.
வாக்கு மனனும் யாக்கையு மொன்றாச்
சொற்றரு கரண மற்றிவை மூன்றும்
நின்புகழ் நவிற்றியு நினைத்துநின் றுணைத்தாள்
அன்புட னிறைஞ்சியு மின்பமுற் றனவால்

    (7-12) அருத்தி - அன்ப. உருத்திரகணங்கள் - அடியவர் கூட்டம் (336); “உருத்திரப் பல்கணத்தார்க், கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்” (தே. திருஞா. திருமயிலை.) சொக்க நாயகன்: தருமபுர மடத்தில் வழிபடப்பெறும் சிவ லிங்கப் பெருமான். ஈரெண்திறத்து உபசாரம் - ஆவாகனம் முதலிய பதினாறு வகை உபசாரங்கள்.

    (13-22) திருவாரூர்ச் சோலைவளம் கூறப்படும்.

    முட்புறக் கனிகள் - பலாப்பழங்கள். (பி-ம்.) ‘கனிகள் பெட்புறக் காண்டலும்’, விட்புறக் கமழ்தலும்’. விட்புற - வெடிக்க; விட்பு - விள்ளுதல். அஞ்சனம் - புதையலைத் தோற்றச் செய்யும் மை. பலாப் பழத்திற்குப் பொற்குடமும் குரங்குக்குக் கள்வரும் உவமை.

    (25-8) நவிற்றல் முதலியவற்றை முறையே வாக்கு முதலியவற்றின் செயல்களாக்க் கொள்க; நிரனிறை.