பக்கம் எண் :

பண்டார மும்மணிக்கோவை455

நேரிசை யாசிரியப்பா
593.
ஏழுயர் மும்மதச் சூழிமால் யானை
தடம்புனல் குடைந்து படிந்தெழுந் துழக்கத்
தெண்டிரை சுருட்டுங் குண்டகழ் வாவியிற்
பங்கயத் தவிசிற் பசும்பொற் றாதளைந்
5.
தங்கம் வேறுபட் டரசனம் பொலிதலும்
ஆவலிற் படர்ந்த சேவல்கண் டயிர்த்துநம்
பேடையன் றிதுமல ரோடையு மன்றே
படரும்வெண் டாமரை படர்ந்ததை யன்றிது
கடவுள ரமுதங் கடைந்தபாற் கடலே
10.
காந்துவெங் கனற்கட் களிறுமன் றிதுகடற்
சாய்ந்தெழு மந்தரத் தடங்கிரி யதுவே.
போகுவா லுறுப்பும் புழைக்கையுந் தைவரு
பாகரோ வாசுகி பற்றும்வா னவரே
பொங்கிவெண் ணிலவு பொழிந்தவெண் டரளமன்
15.
றிங்கிது வங்கதி லெழுந்தவா ரமுதே
கொடிவிடு பாசடைக் குழாமன் றிங்கிதக்
கடலிடைத் தோன்றிய கற்பகா டவியே

    593. (அடி, 1-26) இவ்வடிகளில் திருவாரூரிலுள்ள தடாகத்திற்குப் பாற்கடல் உவமையாகக் கூறப்படும்.

    (1-2) ஏழு உயர் யானை - ஏழுமுழம் உயர்ந்த யானை; சீவக. 775 ந.

    (5-6) அரசனமென்றது இங்கே பேடையை. சேவல் - ஆணன்னம். அயிர்த்து - ஐயமுற்று.

    (7) (பி-ம்.) ‘ஓடை யன்றே’.

    (8-9) வெண்டாமரையின் மிகுதி அத்தடாகத்தைப் பாற்கடலாகத் தோற்றச் செய்தது.

    (10-11) யானைக்கு மந்தரமலை உவமை.

    (12-3) போகுவால் - நீண்ட வால். துதிக்கைக்கு வாசுகியின் தலைப்பக்கமும், வாலுக்கு அதன் வாற்பக்கமும், பாகருக்குத் தேவரும் உவமைகள். அசுரரும் கடைந்தாராயினும் சிறப்பு நோக்கி வானவரென்றார்; அசுரரும் வானத்தில் வாழ்தலின் வானவரென்பது அவரையும் உள்ளிட்டதாக்க் கொள்ளுதலும் பொருந்தும்.

    (14-5) முத்தின் தொகுதிக்கு அமுதம் உவமை.

    (16-7) கொடி - தாமரைக் கொடி முதலியவை. பாசடைக் குழாம் - பசிய இலையின் தொகுதி; அதற்குக் கற்பகாடவி உவமை.