596. | தடுத்த பிறவித் தளையாம் விலங்கு தனைமுறித்து | | விடுத்த கருணைக் கடன்மாசி லாமணி மெய்ப்புகழாற் | | றொடுத்த தமிழ்மும் மணிக்கோவை நித்தந் துதிக்கவல்லார் | | எடுத்த சனனத்தி லெய்தாத பேரின்ப மெய்துவரே. |
597. | உள்ளத் தருணின் றுணர்ந்தவென் னாவி லுறைந்தவெள்ளை | | வள்ளக் கமலத் தவண்மாசி லாமணி வண்புகழில் | | எள்ளத் தனையள வோர்தொடை யாக்கி யிசைத்தனளாற் | | கள்ளப் புலன்கொண் டுரைத்தே னலனிக் கவிமுற்றுமே. |
598. | விரிக்குஞ் சரியையிப் பாமாலை சேர்த்தது மெய்க்கிரியை | | தரிக்கும் படிக்கின்று சாற்றிய தேமற்றென் றண்டமிழைத் | | தெரிக்கின்ற போதருள் செய்தது வேசிவ யோகமுண்மை | | பரிக்கின்ற ஞானமொன் றேமாசி லாமணி பாலித்ததே. |
பின்னே வரும் இரண்டு செய்யுட்கள் பழைய பதிப்புகளிற் காணப்படுகின்றன.
நேரிசை யாசிரியப்பா | தமிழ்மணங் கமழுங் கமலையம் பதிவாழ் | | ஞானசம் பந்தனை வணங்கின் | | ஈனசம் பந்த மில்லைவீ டெளிதே. |
வஞ்சித்துறை | மாசி லாமணித் | | தேசி காவென | | பேசு வோர்கண்முப் | | பாச மோடுமே. |
பண்டார மும்மணிக்கோவை முற்றிற்று.
596. எடுத்த சனனத்தில் - இம்மையிலே யென்றபடி.
(பி-ம்.) ‘அடுத்த சனனத் தடைவர்தப் பாரரு ளானந்தமே’.
597. வெள்ளை வள்ளக் கமலத்தவள் - கலைமகள்.
598. ஞானாசிரியருக்குச் சாத்துதற்கு இப்பாமாலையை இயற்றியது சரினயா யாகும். அவர் தரிக்கும்படி இதனைச் சாற்றியது கிரியையாகும்.
(பி-ம்.) ‘சாத்தியதே’.
(பி-ம்.) ‘தண்டமிழ்நீ’. இதனை அவர் ஏற்றுக்கொண்ட போது திருவருள் புரிந்ததே சிவயோகமாகும். அடியேனுக்கு அவர் வழங்கியது ஞானம்.
|