காசிக் கலம்பகம்
நேரிசை வெண்பா 599. | பாசத் தளையறுத்துப் பாவக் கடலகலக்கி | | நேசத் தளைப்பட்டு நிற்குமே - மாசற்ற | | காரார் வரையீன்ற கன்னிப் பிடியளித்த | | |
மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா
-தரவு- 600. | (1) நீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியான | | கார்கொண்ட பொழிற்காசிக் கடிநகரங் குளிர்தூங்க | | இடமருங்கிற் சிறுமருங்குற் பெருந்தடங்க ணின்னமிர்தும் | | சடைமருங்கி னெடுந்திரைக்கைப் பெண்ணமிர்துந் தலைசிறப்பக் | | கண்பதுவு கடவுண்மணி தெரிந்தமரர் கம்மியன்செய் | | விண்கதுவு பொலங்குடுமி விமானத்தின் மிசைப்பொலிந்தோய். | (2) | நிற்பனவுந் தவழ்வனவு நடப்பனவு மாய்நிலத்துக் | | கற்பமள விலகண்டு முறுகளைகண் காணாமே | | பழங்கணுறு முயிர்கடுயர்க் கடனீத்துப் பரங்கருணை |
599. நேசத்தளை - அன்பாகிய தளை; “தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி” (திருவிளை. கடவுள்.) விநாயகரை யானையென்றதற்கு ஏற்ப யானையின் இயல்புகளாகிய தளையறுத்தலும் கடல் கலக்கலும் மீட்டும் தளைப்படுத்தலும் கூறினார். வரை - இமயமலை. கன்னிப்பிடி - உமாதேவியார். ஓர் ஆனை - விநாயகக் கடவுள்.
600. (தரவு) 1. பெருந்தடங்கண் - விசாலாட்சியம்மை; “கயலார் தடங்கண்ணாள் காந்தன்” (604). (பி-ம்.) ‘இன்னமிர்தம்’. திரைக்கைப் பெண்ணமிர்து - கங்கை. (பி-ம்.) ‘பெண்ணமிர்தம்’. அமரர் கம்மியன் - தேவதச்சனாகிய விசுவகர்மா. (பி-ம்.) ‘மிசைப்பொலிவோய்’.
(2) நிற்பன - அசரம். தவழ்வனவும் நடப்பனவும் - சரம். களைகண் - துன்பத்தை நீக்கும் துணை. பழங்கண் - துன்பம். பழமறையின் முதலெழுத்து - பிரணவ மந்திரம். வரையாது - இன்னார்க்குரியது. இன்னார்க்குரியதன்று என்று கொள்ளாமல்.
|