6. | முடைத்தலையிற் பலிகொள்வான் மூவுலகு மவரவர்தங் | | கடைத்தலையிற் றிரிவதுகொல் யாம்பெறுநின் காணியே. |
-அராகம்- 1. | உளதென விலதென வொருவரொ ரளவையின் | | அளவினி லளவிட லரியதொ ருருவினை. | 2. | இதுவென லருமையி னெழுதரு மொழிகளும் | | அதுவல வெனுமெனி னுவருனை யறிபவர். | 3. | அவனவ ளதுவெனு மவைகளி னுளனலன் | | எவவை னிவனென வெதிர்தரு தகைமையை. | 4. | அறிபவ ரறிவினு ளறிவுகொ டறிவுறு | | நெறியல தொருவரு மறிவரு நிலைமையை. |
-நாற்சீரோரடி அம்போதரங்கம்- | ஆணொடு பெண்ணுரு வமைத்து நின்றனை. | | பூண்முலை கலந்துமைம் புலனும் வென்றனை. | | எண்வகை யுறுப்பினோ ருருவெ டுத்தனை. | | தொன்மறைப் பனுவலின் றொடைதொ டுத்தனை. |
-முச்சீரோரடி அம்போதரங்கம்- | வடவரை குழைய வளைத்தனை. | | மலைமகண் முலைக டளைத்தனை. | | விடமமிர் தமர விளைத்தனை. | | விசயனொ டமர்செந் திளைத்தனை. | | வரிசிலை வதனை யெரித்தனை. | | மதகரி யுரிவை தரித்தனை. | | அருமறை தெரிய விரித்தனை. | | அலகில் பல் கலைக டெரித்தனை. |
6. சாரூபம் பெறுவோர் பிச்சை கொள்ளுதலைக் கூறுவர். பலிகொள்வான் - பிச்சை ஏற்றற்பொருட்டு. அவரவர்தம் - உலகிலுள்ளாராகிய அவரவருடைய. கடைத்தலையில் - வாயிலில். காணி - உவமை.
(அராகம்.) 1. அளவை - பிரமாணம்.
(நாற்சீரோரடி அம்போதரங்கம்.) பூண்முலை - உமாதேவியார். எண்வகை உறுப்பு - பிருதிவி முதலிய அட்ட மூர்த்தம்.
(முச்சீரோரடி அம்போதரங்கம்.) வடவரை - மேருமலை. அமிர்து அமர - அமிர்தத்தை ஒப்ப. விசயன் - அருச்சுன்ன். உரிவை - தோல்.
|