எனவாங்கு
-சுரிதகம்- | உலகுசூற் கொண்ட தலைவியு நீயும் | | மலைபக வெறிந்த மழவிளங் குழவியை | | அமுதமூற் றிருக்குங் குமுதவாய்த் தேறல் | | வண்டுகி னனைப்ப மடித்தலத் திருத்திக் | | கண்களிற் பருகியக் காமரு குழவி | | எழுதாக் கிளவி யுன்சுவை பழுத்த | | மழலைநா றமிர்தம் வாய்மடுத் துண்ணச் | | செஞ்செவி நிறைத்தநும் மஞ்செவிக் கடிகளென் | | புன்மொழிக் கடுக்கொளப் புகட்டின்ன் | | இன்னருள் விழைகுவா யிறும்பூ துடைத்தே. |
நேரிசை வெண்பா 601. | உடையா ளகிலேசர்க் கோங்குமுலைக் கோட்டின் | | அடையாள மிட்டுவையா ளானாற் - கடையிலவர் | | செவ்வண்ணம் பெற்றார் திரளொடுநிற் கின்றாரை | | எவ்வண்ணங் கண்டிறைஞ்சு வேம். |
எனவாங்கு: தனிச்சொல்.
(சுரிதகம்.) குழவி - முருகக் கடவுள். செஞ்செவி - பொன்னணிந்த செவி. அஞ்செவி சுட்டுப்பெயர் மாத்திரையாய் நின்றது. கடு - விடமு; கடுக்காயுமாம் (699). இன்னருளால் இதனை விழைகுவாய்: இச் செயல் வியப்புடையது.
(முடிபு.) எனவாங்கு என் புன்மொழிக்கடுக் கொளப்புகட்டினன்; விழைகுவாய்; அங்ஙனம் விழைதல் இறும்பூ துடைத்து.
601. உடையாள் - உமாதேவியார். அகிலேசர் - விசுவநாதர். கடையில் - உடல் நீங்கிய காலத்தில். அவர் செவ்வண்ணம் பெற்றார் திரளொடு - அப் பெருமானது திருவுருவத்தைப் பெற்றவர்களது கூட்டத்தோடு. நிற்கின்றாரை - நிற்கும் சிவபெருமானை. அடியார் சாரூபம் பெற்ற காலத்தில் நகிற்றழும்பை மாத்திரம் பெறாமையின் அத் தழும்பு இறைவனை அறிந்து கொள்ளுவதற்கு அடையாளமாயிற்றென்றபடி.
|