பக்கம் எண் :

காசிக் கலம்பகம்465

படவர வுமிழ்தரு மணிவெயில் விடவளர்  
    பருதியொ டெழுமுத யத்திற் பொலிந்தன  
  பருகுமி னமிர்தென வுருகிரு கவிஞர்கள்  
    பனுவலின் மதுரவி சைக்குக் குழைந்தன  
  படரொளி விடுசுடம் வலயம தெனவொரு  
    பருவரை நெடுவிலெ டுத்துச் சுமந்தன  
  பரர்புர மெரியொடு புகையெழ மலர்மகள்  
    பணிமுலை தழுவுச ரத்தைத் துரந்தன  

மடலவிழ் தடமல ரிதழியி னிழிதரு
    மதுமழை யருவிகு ளித்துக் கிளர்ந்தன
  வழிதர வுதிரமு நிணமொடு குடர்களும்
    வருநர கரியின்ம தத்தைத் தடிந்தன
  மதகரி யுரியதள் குலகிரி முதுகினின்
    மழைமுகி றவழ்வதெ னப்பொற் பமைந்தன
  மலிபுகழ் நிலவொடு மடுதிறல் வெயிலெழ
    மதிகதிர் வலம்வரு வெற்பொத் துநின்றன

குடவளை துறைதொறு முடுநிரை யெனவரி
    குளிர்நில வெழவுமிழ் முத்தைத் தடங்கரை
  குலவிய படர்சிறை மடவன மொடுசில
    குருகுகள் சினையொட ணைத்துத் துயின்றிடு

    (2) மணிக்குப் பருதி உவமை. உதயத்தின் - உதயகிரியைப் போல. இரு கவிஞர்கள் - கம்பளரும் அசுவதரரும்; தும்புரு நாரதரெனலும் ஆம். பனுவல்- இங்கே, இசைப்பாட்டு. சுடர் வலயம் - ஒளியையுடைய தோள்வளை. பருவரை நெடு வில் - பருத்த மேருமலையாகிய நெடியவில். பரர்புரம் - பகைஞர்களது திரிபுரம். மலர்மகள் பணைமுலை தழுவு சரம் - திருமாலாகிய அம்பு. துரந்தன - எய்தன.

    (3) இதழி - கொன்றை. நிணமொடு குடர்களும் வழிதர வரு நரகரி; நரகரி - நரசிங்கம்; அதனைத் தடிந்தது சரபாவதாரங்கொண்டு. மதகரியுரி அதள் - மதகரியை உரித்த தோல். யானைத் தோலுக்கு மேகமும் தோளுக்கு மலையும் உவமைகள். மலிந்த புகழாகிய நிலவோடு. பகைவரை அட்ட பிரதாபமாகிய வெயில் எழ; (பி-ம்.) ‘மலியுமிழ் நிலவொடு’. ஈதலும் அடுதலும் திருக்கரங்கள் புரிதலின் அவ்விரண்டாலும் முறையே உண்டாகும் புகழும் பிரதாபமும் புயங்களைச் சூழ்ந்தன. மதிகதிர் வலம் வருவெற்பு - மேருமலை.

    (4) குடவளை - குடம் போன்ற சங்கு; வளைந்த சங்கெனினும் ஆம். உடு நிரை - நட்சத்திர வரிசை; முத்துக்களுக்கு உவமை. குடவளை உமிழ் முத்தை. சினையொடு -முட்டைகளோடு. முத்தை அன்னமும் குருகுனளும் தம்