பக்கம் எண் :

470குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

எழுத வரிய திருமார்பி
    லிளஞ்சேய் சிறுசே வடிச்சுவடும்
முழுது முடையாண் முலைச்சுவடு
    முடையார் காசி முதல்வர்க்கே.     
(13)

நேரிசை வெண்பா
612.
வரைவளைக்கும் பொற்றடந்தோண் மைந்தர்க் கிவரார் 
நிரைவளைக்கை யார்நகைக்கு நேராக் - கறையிற் 
குவிமுத்தம் வெண்ணிலவு கொப்புளிக்குங் கங்கை 
அவிமுத்தஞ் சென்றிறைஞ்சா தார்.    
(14)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிவிருத்தம்
613.
ஆர்க்கும் படைவே ளரசிருப்பென்
    றஞ்சா தடிக ளருட்காசி
ஊர்க்கும் புதுத்தோ ரணம்வைத்தா
    லுமக்கிங் கிவள்பேச் சுரைப்பாரார்

    காசிமுதல்வருக்கு, இத்தலைவி இடைவிடாமல் அழுது கொண்டிருத்தலைத் தெரிவிக்க வேண்டுமென்றபடி.

    612. வரை - மேருமலையை. மைந்தர் - வலியுடைய அகிலேசர்; “மாவயர வன்றுரிசெய் மைந்தனிடமென்பர்” (தே. திருஞா.) வரம்பில்லா ஆற்றல் இறைவனுக்குரிய எண்குணங்களுள் ஒன்றென்பது இங்கே நினைத்தற் குரியது. இவரென்றது இறைஞ்சாதவர்களை. ஆரென்றது, இறைவருடைய திருவருளுக்குப் பாத்திரராகாரென்றபடி. நேரா - ஒப்பாக. கரையிற் குவிக்கப்படும் முத்தம். அவிமுத்தம் - காசியை.

    இறைஞ்சாதவராகிய இவர் மைந்தர்க்கு ஆர்.

    613. தோழி கூற்று.

    வேள் - மன்மதன்; எழுவாய். அரசிருப்பு என்று அஞ்சாது தேவரீருடைய இராசதானி என்றெண்ணிப் பயப்படாமல் அரசிருப்பைப் படை வீடென்றும் கூறுவர் (694). ஊர்க்கும் - ஊரினிடத்தும்; உம்மை: உயர்வுச் சிறப்பு. தோரணம் வைத்தல்: ஓரூரை ஒருவர் தம் வசப்படுத்திக் கொண்டு அங்கே செய்யும் ஒருவகைக் கொண்டாட்டம்; இது வசப்படுத்தலென்னும் பொருளில் இங்கே அமைந்தது; “தொல்லைமா நகரு நாடுந் தோரணம் வைக்கச் சொற்றி” (வி. பா. சூதுபோர்ச். 198); “காடெ லாமர சாடைசி செய் தாமரைக் கண்ணன்ப் புதுக் கானும், நீடு தோரணம் வைத்தென”