கொச்சகக் கலிப்பா 618. | சொல்லா வதுமறையே சொல்லுவது நல்லறமே | | இல்லா வதுமுத்திக் கேதுவா மித்தலமே | | அல்லார் குழலளவு மாகொன் மனம்வயிரக் | | கல்லா விருந்தவா காசிப் பிரானார்க்கே. |
கட்டளைக் கலித்துறை 619. | பிரானென் றவர்க்கொரு பெண்ணோடு மோடிப் பெருங்கருணை | | தராநின்ற காசித் தடம்பதி யார்வந்தென் றன்னகத்தே | | இராநின் றனரைம் புலக்கள்வர் கொள்ளையிட் டேகுதற்கே | | வராநின்ற போதுள்ள மாதனங் காத்து வழங்குதற்கே. |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 620. | வழுத்துமவர்க் கானந்த வாழ்வையருள் வார்காசி | | வளமை யெல்லாம் | | கொழுத்ததமி ழாற்பாடித் துளசிமணி தரித்தாடுங் | | கொற்றி யாரே |
618.பாங்கி கூற்று.
சொல், உபதேசிப்பது, இருப்பிடம் ஆகிய மூன்றும் மிக நல்லனவாயிருந்தாலும் அகிலேசர் திருவுள்ளம் பாதுகாத்தற்கு இசையாதிருத்தலால் கல்லாக இருக்கின்றது; இஃது என்ன வியப்பு! தலைவர் மனத்தைக் கல்லென்றல்; “கணவரவர் நெஞ்சதி கருங்கலலவோ” (அழகர் கலம். 65.)
619. பிரான் - வண்மையிற் சிறந்தவர்; இது ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்திற் கண்டபொருள். ஒரு பெண்ணோடும் - உமா தேவியாரோடும். இத்தலத்தில் இறந்த ஆன்மாக்களை அம்பிகை தன் மடியிற் கிடத்தி இளைப்பாற்ற அகிலேசர் பிரணவத்தை உபதேசிப்பரென்பது புராண வரலாறாதலின், ‘பெண்ணோடு மோடிப் பெருங்கருணை தராநின்ற காசித் தடம்பதியார்’ என்றார்; 636: 27-39, பார்க்க. அகத்தே - மனத்தில். கொள்ளையிட்டு - கொள்ளையிட்டு. உள்ளமாகிய பெரிய நிதியைக் காத்து எனக்கு அதை வழங்குதற்கு இராநின்றன ரென்க.
620. கொற்றியார் - வைணவ வேடம்பூண்ட பெண். கைச் சங்கம் - கையிலுள்ள வளையல், சங்கு. ஆழி - மோதிரம், சக்கரம். சங்கையும் ஆழியையும் கண்டு திருமாலாக நினைந்து வணங்கினேம். ஆகின் - ஆதலால்
|