பக்கம் எண் :

காசிக் கலம்பகம்481

ஒழுகொளி மிடற்றி னழகுகவர்ந் துண்டெனக்
கயிறு கொண் டார்க்குங் காட்சித் தென்ன
மரகதங் காய்த்துப் பவளம் பழுக்கும்
20.
கமஞ்சூற் கமுகின் கழுத்திற யாத்து
வீசொளிப் பசும்பொ னூசலாட் டயர்தரப்
பருமணிக் கமுகின் பசுங்கழுத் துடைத்து
திரைபடு குருதித் திரடெறித் தென்ன
முழுக்குலை முரிந்து பழுக்காய் சிதறும்
25.
மங்குல்கண் படுக்கு மதுமலர்ப் பொதும்பர்
கங்கைசூழ் கிடந்த காசி வாணா
ஐவளி பித்தெனு மவைதலை யெடுப்ப
மெய்விட் டைவருங் கைவிடு மேல்வையில்
மாமுத றடிந்த காமரு குழவியும்
30.
பொழிமதங் கரையு மழவிளங் களிறும்
மூண்டெழு மானம் பூண்டழுக் கறுப்ப
இடக்கையி னணைத்துநின் மடித்தலத் திருத்தி
உலகமோ ரேழும் பலமுறை பயந்தும்
முதிரா விளைமுலை முற்றிழை மடந்தை

    (16-8) மகளிர் கமுகமரங்கள் தம் கழுத்தின் அழகைத் திருடியனவென்று கருதி அவற்றைத் தண்டிப்பார் போல அவற்றில் கயிறுகளைக் கட்டி ஊசலாடுகின்றன ரென்பது கருத்து.

    (19-20) “எண்ணார் முத்த மீன்று மரகதம் போற்காய்த்துக், கண்ணார் கமுகு பவளம் பழுக்குங் கலிக்காழி” (தே. திருஞா.); “கருங் கமுகு பசும்பாளை வெண்முத் தீன்று காயெல்லா மரகதமாய்ப் பவளங்காட்ட” (பெரிய திருமொழி, 2, 10:7).

    (21) (பி-ம்.) ‘ஊசலாட் டயரவப்’.

    (24) பழுக்காய் - பாக்கு.

    (25-6) பொதும்பருங் கங்கையும்; பொதும்பர் - சோலை.

    (27-40) இத்தலத்தில் இறந்தோருக்கு அகிலேசர் பிரணவோபதேசம் புரியும் செயல் விரித்துக் கூறப்படும்.

    (28) ஐவர் - ஐம்பொறிகள்; “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மே லுந்தி” (தே. திருஞா.)

    (29) குழவி - முருகக் கடவுள்.

    (30) களிறு - விநாயகர்.

    (31) அழுக்கறுப்ப - பொறாமை கொள்ள.

    (34) மடந்தை - விசாலாட்சியம்மை.