பக்கம் எண் :

482குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

35.
ஒண்டொடித் தடக்கையின் வீசு நுண்டுகிற் 
றோகையிற் பிறந்த நாகிளத் தென்றல் 
மோகமுந் தளர்ச்சியுந் தாகமுந் தணிப்ப 
மறைமுதற் பொருளி னிறைசுவை யமுதினை 
அஞ்செவி மடுத்துண வூட்டிநின் 
40.
குஞ்சித வடிக்கீழ்க் குடியிருத் துகவே.         
(38)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
637.
குடியிருக்கும் புன்குரம்பை குலைந்திடுநாட்
    கொலைக்கூற்றங் குனைத்த செம்பொன்
அடியிருக்கும் பரந்தாமப் புக்கில்புகுந்
    தானந்த வமுத மாந்திக்
கடியிருக்கு நறைக்குழன்முத் தித்திருவை
    முயங்கிடவுங் கடவேன் கொல்லோ
துடியிருக்கு மிடையவளோ டவிமுத்தத்
    திருந்தபரஞ் சோதி யானே.    
(39)


            பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
638.
சோதி யொன்றிலொரு பாதி சத்தியொரு
பாதி யும்பரம சிவமெனத்
தொகுத்து வைத்தவவி முத்த நாயகர்
துணைப்ப தம்பரவு களியரேம்

    (36) தோகை - முன்றானை.

    (40) குஞ்சிதவடி - வளைந்த திருவடி.

    (முடிபு.) சடையோய் (14), காசிவாணா (26), குஞ்சிதவடிக் கீழ்க் குடியிருத்துக (40) என்க.

    637. புன்குரம்பை - உடம்பு; “எல்லாப் படியாலு மெண்ணினா லிவ்வுடம்பு, பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை” (ஒளவையார்). கூற்றம் குமைத்த அடி (488). பரந்தாமம் - முத்தி (655). புக்கில் - சொந்த வீடு; “புக்கிலமைந்தின்று” (குறள், 340). வடமொழி முறை பற்றி முத்தியைப் பெண்பாலாகக் கூறினார் (600).

    சோதியானே, குலைந்திடுநாள் புக்கில் புகுந்து, மாந்தி முயங்கிடவும் கடவேன் கொல்லோ?

    638. கள்ளுண்டு ஊனுகரும் வழக்க முடையவன் ஒருவன் தன் வழக்கத்தைச் சிறப்பித்துக் கூறுவதாக அமைந்தது இச் செய்யுள்.

    யாகம் அதிகமென்பது ஏதினால். பசுவைப்படுத்தலால் யாகம் சிறப்புடையதாயிற்றென்பது களியின் கருத்து. அன்பர் தம் - கண்ணப்ப