அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 640. | கொள்ளையிடச் சிலர்க்குமுத்திச் சரக்கறையைத் | | திறந்துகொடுத் தனந்த கோடிப் | | பிள்ளைகள்பெற் றுடையபெரு மனைக்கிழத்திக் | | கேகுடும்பம் பேணு கென்னா | | உள்ளபடி யிருநாழி கொடுத்ததிலெண் | | ணான்கறமு மோம்பு கென்றார் | | அள்ளல்வள வயற்காசி யாண்டகையார் | | |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 641. | அழகு துயில்குங் குமக்கொங்கை | | யணங்கே யெங்க ளருட்காசிக் | | குழகர் மகற்கு மகட்கொடுத்த | | குடியிற் பிறந்த குறமகள்யான் | | ஒழுகு தொடிக்கைக் குறியுமுகக் | | குறியுந் தருமொள் வளைக்குறியும் | | புழுகு முழுகு முலைக்குறியு | | முடையா ரவர்பொற் புயந்தானே. |
640. சரக்கறை - நிதி முதலியன வைக்கப் பெற்றிருக்கும் அறை; “சரக்கறை யோவென் றனிநெஞ்சமே” (தே.) குடும்பம் பேணுக என்னா - குடும்பத்தைப் பாதுகாப்பா யென்று. வளவயற்காசி யென்றது, பின்னும் மிகுதியாக அளிக்கும் வாய்ப்புடையவரென்னும் குறிப்புடையது.
அயலாருக்குச் சரக்கறையையே கொடுத்துவிட்டுப் பல பிள்ளைகளையுடைய தம் மனைவிக்கு இரு நாழி நெல் மட்டும் கொடுத்தது பெருந்தகைமையாகாதென்று புலப்படுத்தியபடி; இது பழிப்பதுபோலப் புகழ்தல். பெருந்தகைமை - வள்ளன்மை.
“கண்ணகன் ஞாலத் தெண்ணில்பல் கோடிப், பிள்ளைகள் பெற்ற பெருமனைக் கிழத்திக்கு, நெல்லிரு நாழி நிறையக் கொடுத்தாங், கெண்ணான் கறமு மியற்றுதி நீயென, வள்ளன்மை செலுத்து மொண்ணிதிச் செல்வ” (463) என்பது இதனோடு ஒப்பு நோக்கி இன்புறற்பாலது.
641. மகற்கு - முருகக் கடவுளுக்கு. மகள் - வள்ளி நாயகியை. குடி - குறவர் குடி. உன்னுடைய கைக்குறி முதலியன அகிலேசர் பொற்புயத்தைத் தரும்; நீ கவலா தொழிக என்றாள் (181)
|