பக்கம் எண் :

486குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
 
644.
தாக்கு படைவேள் கணைமழைக்குத் தரியா திருகண் மழையருவி
தேக்கு மிவட்கா னந்தவனத் திருந்தா ருள்ளந் திருந்தார்கொல்
காக்க வரிய விளவாடைக் காற்றுக் குடைந்து கரந்துவச்சை
மாக்க ளெனவே முடவலவன் வளைவா யடைக்கு மழைநாளே.    
(46)

கட்டளைக் கலித்துறை
 
645.
மழைவளைக் கும்பொழிற் காசிப்  
   பிரான்வெற்பில் வண்டறைபூந்  
தழைவளைக் கைக்கொடுத் தேன்கண்ணி  
   லொற்றித் தளரிடைதன்  
இழைவளைக் குங்கொங்கை யூடணைத்  
   தாளித் தழையினுள்ளே  
கழைவளைக் குஞ்சிலை வேளனை  
   யாயிதைக் கண்டுகொள்ளே.    
(47)

    644. தோழி கூற்று.

    தேக்கும் - நிறைக்கும். உடைந்து - தோற்று. கரந்து - மறைது. வச்சை மாக்கள் - உலோபிகள். அலவன் - நண்டு, “இழைபடப் பெட்யொடு மெள்ளி னள்ளிகள், புழையடைத் தொடுங்கின வச்சை மாக்கள் போல்” (கம்ப. கார்காலப். 121).

    மழைநாளில் ஆனந்த வனத்திருந்தார் உள்ளம் திருந்தார் கொல்.

    645. பாங்கி கூற்று; இறைவி கையுறையேற்றமை இறைவனுக்கு இயம்பல்.

    பொழிலாற் சிறப்புடைய வெற்பென்றமையால் தழைக்குரிய மலரும் தளிரும் அவளுக்கு அரியனவன்றாதலின் நின் தழையை ஏற்றுக் கொண்டது நின்பாலுள்ள அன்புன் பொருட்டே என்பதைக் குறிப்பித்தாளாயிற்று. வண்டுஅறை பூந்தழையென்றனையால் அத்தழை மணமுள்ள மலர்களாலும் தழையாலும் ஆக்கப்பட்டதென்பது போந்தது. வளைக்கை - தலைவியின் வளைக்கையில். கண்ணி லொற்றியது அதன்பாலுள்ள மதிப்பையறிவித்தற்கு; கொங்கையூ டணைத்தது அவள் காதலைப் புலப்படுத்தியது. தளரிடை - தலைவி. தழையினுள்ளே - தழையின் திறத்திற்காட்டிய அன்பின் வழியாக. தழையின்பாற் காட்டிய மதிப்பையும் அன்பையும் அறிந்து அவள் உடம்பாட்டை நீ தெளிந்து கொள்வாயாக.