அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 648. | செந்தே னொழுகும் பொழிற்காசி | சிறுநுண் ணுசுப்பிற் பெருந்தடகட் | பைந்தே னொழுகு மிடப்பாகர் | படைவீ டென்ப துணராய்கொல் | வந்தேன் வளைந்தா யெமைப்பாவி | மதனா வினையே விளைந்தபோர் | உய்ந்தே குவதிங் கரிதனற்க | ணுடையார் மழுவாட் படையாரே. | | | | | | | |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 649. | படலைநறுங் கடுக்கைமுடிப் பரஞ்சுடரா | ரிசைபாடிப் பசுந்தேன் பில்கி | மதலவிழ்பூம் பொழிற்காசி மணிமறுகில் | விளையாடு மதங்கி யாரே | உதலுமெமக் கயிருமொன்றே யோடரிக்கண் | விளிரண்டு மொழிய வென்னே | தொடலவலைளைத் தடக்கையின்வா ளிரண்டெடுத்து | | | | | | | | |
648. தலைவி காமமிக்க கழிபடர் கிளவியாற் கூறும் மன்மதோபாலம்பனம்.
மன்மதனே, இத்தலம் அகிலேசரது படைவீடென்பதை அறியாயோ: நீ இங்கே வந்தால் பிழைத்தல் அரிது; உன்னை முன்பு எரித்த நெற்றிக்கண்ணையுடைய அவரே இங்கே உள்ளார்.
பெருந்தடங்கட் பைந்தேன் - விசாலாட்சியம்மை. காசி படைவீடெம்பது: 694. திருக்கோயிலுள்ள இடங்களைப் படைவீடென்பது முருகக் கடவுளுடைய தலங்களை ஆறு படைவீடென்பதனாலும் அறியப்படும். வந்து ஏன் வளைந்தாய். வினையே - நீ வளைந்ததற்குக் காரணம் உனது தீவினையே. விளைந்த - விளைந்தன: பெரயெச்சமுமாம். முன் எரித்த நுதற்கண்ணும், மேலும் பொருதற்கு மழுவாட்படையு முடையாரென்றது நீ உய்தல் அரிதென்பதற்குக் காரணம் புலப்படுத்தியவாறு.
649. வாளெடுத்துக் கூத்தாடுவாளைப் பார்த்துக் கூறியது. படலை - பூவும் தழையும் விரவித் தொடுத்த மாலை. பரஞ்சுடரார் - அகிலேசர். இசை
|