கலித்தாழிசை 650. | தொடங்காமே பணிமலருந் தூவாமே நல்கும் | கடங்கால் களிற்றுரியார் காசிவளம் பாடி | விடங்கான் றகன்றுகுழை மேற்போய்க் குடங்கைக் | கடங்காத வுண்கணீ ராடுகபொன் னூசல் | அம்பொன்மலர்க் கொம்பன்னீ ராடுகபொன் னூசல் | | | | |
நேரிசை வெண்பா 651. | பொன்னந்தா தென்னமலர்ப் பூந்துறையிற் புண்டரிகத் | தன்னந்தா தாடு மவிமுத்தல் - இன்னமிர்தா | முன்னங் கடுக்கை முகந்துண்டார் நல்காரே | | | | |
பாடி விளையாடுமென்க. உடலும் ஒன்று உயிரும் ஒன்று என ஒன்று என்பதை இரண்டற்கும் கூட்டுக. அவ்விரண்டற்கும் இரண்டு கண்களாகிய வாள் இரண்டும் போதுமே; அவற்றையன்றி இரு கைகளிலும் இரு வாள்களைக் கொண்டது என்ன பயன் கருதி? தொடலை வளை - மாலையாகத் தொடுத்த வளை (542 : 1.) தொடங்குமாறு என்? 119-ஆம் செய்யுளையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.
650. பணி தொடங்காமே - தொண்டுகளைச் செய்யத் தொடங்காமலே. மலரும் தூவாமே - அருச்சனை செய்யாமலே. நல்கும் - தண்ணளி செய்யும். இத்தலத்தில் இறப்பவர்கள் யாதொரு பணியும் செய்யாதிருந்தாலும் அவ்விறத்தலே காரணமாகச் சாரூபத்தைப் பெறுவாரென்பதைக் குறிப்பித்தார்.
கடம் கால் - மதத்தை வெளிவிடும். குடங்கை - உள்ளங்கை. உண்கண் - மையுண்ட கண். பொன் மலர்க்கொம்பு - கற்பகமரத்தின் பூங்கொம்பினை.
651. தோழி கூற்று.
பொன்னந்தாது என்ன - பொற்கொடியைப் போல. அன்னம் தாமரைத்தாதில் ஆடும். முன்னம் கடுவைக் கைசில் முகந்து அமிர்தாக உண்டார்; கடு - விடம். இவட்குக் கடுக்கையை இன்னம் நல்கார்; கடுக்கை - கொன்றைமாலையை.
|