கொச்சகக் கலிப்பா 654. | ஆமோ வவிமுத்தத் தையரே பெண்பழிவீண் | போமோ வயிரவர்தஞ் சாதனமும் பொய்யாமோ | தேமோது கொன்றைச் செழுந்தாம நல்காநீர் | தாமோ தருவீ ருமதுபரந் தாமமே. | | | |
கலிநிலைத்துறை 655. | பரந்தா மத்தைப் பல்லுயிர் கட்கும் பாலிப்பார் | வரந்தா மத்தைப் பின்றரு வதைமுன் வழங்காரேற் | புரந்தா மத்தைப் பொருதரு காசிப் புரமானார்க் | கிரந்தா மத்தை யெனப்புக லீரேந் திழையீரே. | | | |
நேரிசை யாசிரியப்பா 656. | இழுமென் மழலை யின்னமு துறைப்பப் | பிழிதே னொழுக்கி னொழுகுமின் னரம்பின் | வள்ளுகிர் வடிம்பின் வனம்முனை வருடித் | தெள்விளி யெடுக்குஞ் சீறியாழ்ப் பாண | | | |
654. தலைவி கூற்று.
இத்தலத்தில் பாவஞ் செய்தவர்க்கு யமதண்டனை இல்லையென்பதும் வயிரவர் தண்டனை மட்டும் உண்டென்பதும் புராண வரலாறுகள். சாதனம் - தண்டனை. பரந்தாமம் - முத்தி (637, 692). ஒரு தாமத்தை தராமல் நிற்கும் தேவரீர் பரந்தாமத்தைத் தருவது எங்ஙன முண்மையாகுமென இதில் ஒரு நயம் தோற்றியது; தாமம்; சிலேடை.
655. தலைவி கூற்று; பாங்கி விடு தூது.
பரந்தாமத்தை - முத்தியை. வரம் தாமத்தைப் பின் தருவதை - மேன்மையையுடைய கொன்றைமாலையை இறந்தபின் அளிப்பதை. புரம் தாமத்தைப் பொருதரு - வீடுகள் மலைகளை ஒத்தற்கு இடமான. (பி-ம்.) ‘வரந்தா மத்தைப் தருவதை நீர்பின் வழங்காரேற், புரந்தா மத்திற் பொலிதரு காசிப் புரமானார்க்’. மத்தை இரந்தாமென - ஊமத்த மலரையேனும் யாசித்தோமென்று; மத்து - ஊமத்தை (546). ஏந்திழை யீரென்றது தோழிமாரை.
நான் இறந்தபின் சாரூபம் பெருங்காலையில் எனக்கு அளிக்கப்படும் கொன்றைமாலையை இப்போதே தருக என்று கேளுங்கள்; இல்லையெனின் அவர் அணியும் ஊமத்தமலரையேனும் கேட்டு வாங்கி வாருங்களென்றாள் தலைவி.
656. அகிலேசர்பால் திருவருள் பெற்றுப் பெருஞ்செல்வமெய்தி வரும் பாணன் ஒருவன் அவரிடம் செல்லும்படி மற்றொரு பாணனுக்குக் கூறியது.
(அடி, 1-5) மழலையென்றது இங்கே இன்னொலியைக் குறித்து
|