5. | வாழிய கேண்மதி மாற்றமொன் றியானும் | ஏழிசைப் பாணன்மற் றிறைமக னலனே | பலவுடன் பழிச்சுவ தொழிகமற் றம்ம | சிலபகல் யானுநின் னிலைமைய னாகி | நலம்பா டறியா விலம்பா டலைப்ப10. | நீர்வாய்ச் சிதலையு நூல்வாய்ச் சிலம்பியும் | சிலவிட மேய்ந்த சிறுபுன் குரம்பையில் | மசகமு முலங்கும் வாய்ப்படைக் குடவனும் | பசையில் யாக்கைத் தசைகறித் துண்ண | அரும்பசிக் குணங்கியும் பெரும்பிணிக் குடைந்தும்15. | சாம்பல்கண் டறியா தாம்பி பூத்த | எலிதுயி லடிப்பிற் றலைமடுத் தொதுங்கிச் | | | | | | | | | | | |
நின்றது. உறைப்ப - துளிக்க. தேனொழுக்கு யாழ்நரம்பிற்கு உவமை (சீவக. 559, 722.) உகிர் வடிம்பின் - நகத்தின் விளிம்பினால். வருடி - தடவி. தெள்விளி - தெளிந்த பாட்டு (சீவக. 661.) சீறியாழ்ப்பாண - சிறிய யாழையுடைய பாணனே; பாணர்களுள் சிறிய யாழையுடையோரைச் சிறுபாணரென்று கூறும் வழக்குச் சிறுபாணாற்றுப்படையால் அறியப்பெறுகின்றது, இதனால் இச்செய்யுளும் சிறுபாணாற்றுப்படையாகவே கொள்ளற்குரியது. மாற்றம் ஒன்று கேள்; மதி: அசைநிலை.
(6-12) தன் பண்டை நிலைமையை விரித்துரைக்கின்றான்.
(6-7) எதிர்வந்த பாணன் தன்னை ஓரரசனென்று கருதிப் புகழத் தொடங்கினானாதலின் இவன் இங்ஙனம் கூறுவானாயினன். இறைமகன் - அரசன் உடன் - ஒருங்கு.
(8) நின்னிலைமை யென்றது மிக்க வறுமையுற்ற நிலையை.
(9) நலம்பாடு - இன்பம். இலம்பாடு - வறுமை (316 : 2-3)
(10) சிதலை - கறையான். சிலம்பி - சிலந்தி.
(11) குரம்பையில் - குடிசையில்.
(12) மசகம் - கொசுகு. உலங்கு - கொசுகுபோல் வதொரு சாதி; “உலங்நகும் மேல்வர வொழிக்கற் பாலதோ” (கம்ப. யுத்த. மந்திரப். 20) வாய்ப்படை - வாயாகிய படையையுடைய. குடவன் - குடவுண்ணி; இது கடித்து இரத்தத்தை உண்ணுவதாதலின் ‘வாய்ப்படைக் குடவன்’ என்றார்.
(13) கறித்து - கடித்து.
(14) உணங்கி - வாடி.
(15-6) “ஆடுநனி மறந்த கோடுய ரடுறப்பின், ஆம்பி பூப்ப” (புறநா. 164 : 1-2.) தலைமடுத்து - சேர்ந்து.
|