பக்கம் எண் :

494குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

பொன்னடி வணங்கி யின்னிசை பாடலும்
அந்நிலைக் கண்ணே யகல்விசும் பொரீஇச்
40.
சுரபியுந் தருவும் பெருவளஞ் சுரப்ப
இருமையும் பெற்றன்ன் யானே நீயுமத்
திருநகர் வளமை பாடி யிருநிலத்
திருநிதிக் கிழவனேக் கறுப்பத்
திருவொடும் பொலிக பெருமகிழ் சிறந்தே.    
(58)


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
657.
சிறைவிரிக்கு மதுகரங்கா டேம்பிழிபூம்
    பொழிற்காசித் திருநா டாளும்
மறைவிரிக்குஞ் சிலம்படியார் திரள்புயத்துப்
    புரளுநறு மலர்ப்பூங் கொன்றை
நறைவிரிக்கு மிதழ்க்கரத்தா லூட்டுமது
    விருந்துண்டு நயந்து மற்றென்
குறைவிரித்தோ ரிருவரிசை கூட்டுண்ணுந்
    திருச்செவிக்கே கூறு வீரே.    
(59)

கட்டளைக் கலித்துறை
658.
கூற்றடிக் கஞ்சிக் குலையுநெஞ் சேயஞ்சல் கோச்செழியன் 
மாற்றடிக் கஞ்சு மிடப்பா கனைமள்ளர் கொன்றகருஞ் 
சேற்றடிக் கஞ்ச மலர்வயற் காசிச் சிவக்கொழுந்தைப் 
போற்றடிக் கஞ்சலி செய்பற்று வேறு புகலில்லையே.     
(60)

    (38) யான் பாடலும்; உம்மை உடனிகழ்ச்சி.

    (39) ஒரீஇ - நீங்கி.

    (40) சுரபி - காமதேனு. தரு - கற்பகமரம்.

    (41) இருமையும் - இம்மைப் பயனும் மறுமைப்பயனும்.

    (43) இருநிதிக்கிழவன் - குபேரன். ஏக்கறுப்ப - இசை செல்வத்தை யாம் பெற்றிலேமே யென்று வருந்த.

    657. தலைவி வண்டைத் தூது விட்டது.

    தேம்பிழி - தேனைப் பிழிகின்ற. மதுகரங்காள், கூறுவீர்.

    658. அஞ்சல் - அஞ்சாதே. கோ: முடியையுடைய மன்னர்களுக்குரிய அடைமொழி. செழியன் - அரிமர்த்தன பாண்டியன். மாற்றடி - பிரம்படி; மாறு - பிரம்பு; இது பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலால் விளங்கும். கொன்ற - உழுது புளிக்கவைத்த. சேறு அடி - சேற்றினிடத்தே.