பக்கம் எண் :

496குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

ஆசிரியவிருத்தம்
661.
கண்ட மட்டு மிருண்டு பாதி
பசந்து பாதி சிவந்துளார்
காசி நாதர் கரத்து வைத்த
கபால மொன்றல தில்லையால்
உண்டு கோடியின் மேலு மையர்
பதம்பெ றக்கட வாரவர்க்
கொவ்வொ ருத்தர் கரத்தி லொவ்வொர்
கபாலம் வேண்டு மதற்கெலாம்
பண்டி ருந்த விரிஞ்சன் மார்தலை
மாலை யுஞ்செல வாய்விடிற்
பார மென்றலை மேல்வ ருங்கொ
லெனுங்க வற்சியி னாற்பகங்
கொண்டல் வண்ணர்துயில் கொள்ள வுந்துயி
லார்பி தாமக னாரெனுங்
கொள்கை கண்டும் விழைந்து வாவவர்
பதஞ்ச மீரகு மாரனே.    
(63)

         அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
662.
கும்ப மிரண்டு சுமந்தொசியுங் கொடிநுண்    
    மருங்கு லிறுமுறுமென்
றம்பொற் பசுங்கொம் பன்னாளை யாகத்    
    தணைத்த வகிலேசர்

    661. கண்டமட்டும் - கழுத்துமாத்திரம். பாதி பசந்து - உமாதேவியாருக்குரிய இடப்பாதி பச்சைநிறம் பெற்று. சிவ சாரூபம் பெறுவார் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கபாலமாக ஈவதில் காசிநாதர் தாம் அணிந்துள்ள பல பிரமதேவர்களின் தலைமாலை செலவாகிவிடின், தம் தலையைக் கொள்ளக் கருதுவாரென்னும் கவலையினால் இப்பொழுதுள்ள பிரமதேவர் துயிலாதிருந்தனம்; இங்ஙனம் கவற்சிக்குரிய நிலையினதாக இருந்தும் அப்பிரம்பதவியைப் பெற ஆஞ்சநேயர் தவம் புரிந்தது என்ன அறியாமை! விரிஞ்சன்மார் தலைமாலை: 531 (பி-ம்.) ‘விரிஞ்சன்மாறலை’. பிதாமகனார் - பிரமதேவர். விழைந்தவா - விரும்பியது என்ன அறியாமை! அவர்பதம் - பிரம்பதவியை. சமீரகுமாரன் - அனுமான்; சமீரம் - வாயு; சமீரணனென்பதன் சிதைவு. அனுமான் பிரமபதவியைக் குறித்துத் தவஞ்செய்கின்றனரென்பது புராண வரலாறு.

    662. தோழி கூற்று.