பக்கம் எண் :

காசிக் கலம்பகம்497

செம்பொ னிதழித் தெரியலையே சிந்தித்  
   திருப்பத் திரண்முலையும்  
பைம்பொ னுருவும் பீர்பூத்த பவளச்  
   செவ்வாய்ப் பசுங்கிளிக்கே.    
(64)

கட்டளைக் கலித்துறை
663.
கிள்ளைக் கமிர்த மொழிசாற்
   றிடுங்கிஞ் சுகவிதழ்ப்பெண்
பிள்ளைக் கிடந்தந்த காசிப்
   பிரான்பிறை யோடுமுடிக்
கொள்ளைச் சிறைவண்டு கூட்டுணுங்
   கொன்றையுங் கூடவைத்தார்
வள்ளக் கலச முலைக்கங்கை
   யாளுயிர் வாழ்வதற்க்கே.    
(65)

கலிவிருத்தம்
664.
வாட்ட டங்கண் மழைப்புனன் மூழ்கியே
சேட்டி ளங்கொங்கை செய்தவ மோர்கிலார்
தோட்டி னங்கொன்றை சூடிப்பொ னம்பலத்
தாட்டு வந்த வவிமுத்த வாணரே.    
(66)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
665.
நரைமு திரந்தன கண்கள்பஞ் சார்ந்தன    
   நமன்றமர் வழிக்கொண்டார்    
திரைமு திர்ந்துட றிரங்கின திரங்கலை    
   செயலிது மடநெஞ்சே

    கும்பமிரண்டு - இரண்டு நகில்கள். இதழித் தெரியலையே -கொன்றை மாலையையே. பீர் - பசலை நிறம். பசுங்கிளி - தலைவி.

    அகிலேசர் அணிந்த கொன்றைமாலையையே சிந்தித்திருத்தலின் தலைவி பசலைநிறத்தை அடைந்தனள் (343, 507, 552).

    663. தலைவி கூற்று. கிஞ்சுக இதழ் - முள்ளு முருக்கம்பூவைப்போன்ற இதழ். பெண் பிள்ளை - உமாதேவியார். கங்கை சந்திரனது திலவால் தின்புறாமல் கொன்றையையும் அதனுடம் சடைமுடிமேல் வைத்தார்; அதனால் அவள் உயிர்தரித்தாள் (524); எனக்கும் கொன்றைமாலையை வழங்கின் சந்திரனால் துன்பமடையேனென்பது தலைவியின் உட்கோள்.

    664. தலைவி கூற்று. மழைப்புனலில் மூழ்கி அந்நீரில் நின்று தவஞ்செய்வார்போல என் நகில்கள் கண்ணீரில் மூழ்கித் தவம் புரிவதை அவிமுத்தவாணர் ஓர்கிலார்; ஓர்கிலார் - உணர்ந்து அருள் செய்திலர்.

    665. நரைமுதிர்தல் முதலியன மூப்பு நிறைந்து மரண சமயம் குறுகுதற்குரிய அடையாளங்கள். கண்கள் பஞ்சார்ந்தன: “காலன்