பக்கம் எண் :

காசிக் கலம்பகம்501

கட்டளைக் கலித்துறை
673.
கழைக்கரும் பைக்குழைத் தான்மத
    வேளக் கணத்திலம்பொற்
குழைக்கரும் புங்குழைந் திட்டதந்
    தோகுளிர் தூங்குதுளி
மழைக்கரும் பும்பொழிற் காசிப்
    பிரான்மலை யாண்முலைபோழ்
முழைக்கரும் புற்றர வாடநின்
    றாடிய முக்கணனே.    
(75)

674.
கண்ணஞ் சனத்தைக் கரைத்தோடு
    நீர்கடல் செய்யநின்றாள்
உண்ணஞ் சனத்துக்கு மஞ்சவைத்
    தாரும்ப ரோட்டெடுப்பப்
பண்ணஞ்ச நச்சமிர் தாக்கொண்ட
    காசிப் பரமர்ப்பச்சைப்
பெண்ணஞ்ச நச்சர வார்த்துநின்
    றாடுமப் பிஞ்ஞகரே.    
(76)

    விரை குழைக்கும் - விரைதலைச் செய்யும். விடலை - திருமால். அவரைப் போல ஏகுதிரேல்; மேகத்துக்குத் திருமால் உவமை. அவர் காசியிற் சென்று சிவபூசை செய்தனரென்பது தலவரலாறு. அரை குழைக்கும் பொழில் - அரை என்னும் மரம் தளிர்க்கும் சோலையையுடைய; அரை: தொல். உயிர்மயங்கு. 81. அறன் மென்கூந்தல் - உமாதேவியார். தோளைக் குழைத்த இடம் காஞ்சி. இறைவன் தோளழகிற்குத் தோற்று முடிவணங்கினாற் போல மேருமலை வளைந்தது (310). கரை குழைக்கும் - சொல்லின் அளவைக் குழையச் செய்யும்; கரை - சொல்.

    முகில்காள், பேதைதிறங் கழறுவீர்.

    673. தோழி கூற்று.

    கழைக் கரும்பை - இரசதாளிக் கரும்பை. குழைத்தான் - வளைத்தான். பொற்குழையையுடைய கரும்புபோல்வாள்; தலைவி; குழை - காதணி. மழைக்கு அரும்பும். முலைபோழ் முழைக் கரும்புற்று: நகிற்றழும்பாகிய புற்றில்; அரவாட என்பதற்கேற்ப முலைச்சுவட்டைப் புற்றென்றார் (546.)

    இறைவி தழுவக் குழைந்த நீர் இத் தலைவியை வாடச் செய்தல் தக்கதன்றென்றபடி.

    674. தோழி கூற்று.

    கண்ணிலுள்ள அஞ்சனத்தை; அஞ்சனம் - மை. கண்ணீர் கடல் போலப் பெருக நின்றாள். அங்ஙனம் நின்றவள் உள் நஞ்சு அனத்துக்கும்