கட்டளைக் கலிப்பா 677. | மான மொன்று நிறையொன்று நாணொன்று | மதிய மொன்று குயிலொன்று தீங்குழற் | கான மொன்று கவர்ந்துணு மாமதன் | கணைக்கி லக்கென் னுயிரொன்று மேகொலாம் | வான மொன்று வடவண்ட கோளமே | மவுலி பாதல மேழ்தாண் மலையெட்டும் | நான மொன்று புயமுச் சுடருமே | நயன மாப்பொலி யும்மகி லேசனே. | | | | | | | |
நேரிசை வெண்பா 678. | அகிலாண்ட மாயகண்ட மானவகி லேசா | முகிலாண்ட சோலையவி முத்தா - நகிலாண்ட | சின்னவிடைப் பாகா திருநயனஞ் செங்கமலம் | | | | |
அறுசீரக் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 679. | அருகுமதன் குழைத்தகழை தெறித்தமுத்தே | றுண்டெழுவண் டரற்று மோசை | பெருகுசிறு நாணொலியென் றறிவழிந்து | பேதுறுமிப் பேதைக் கென்னாம் | உருகுபசும் பொன்னசும்பு தசும்புவிசும் | பிரவியென வுடைந்து கஞ்சம் | முருகுயிர்க்கும் பொலங்குடுமி விமானத்திற் | | | | | | | | |
677. தலைவி கூற்று.
மானத்தை மதியமும், நிறையைக் குயிலும்; நாணை வேய்ங் குழலோசையும் கவர்ந்துண்ணும்; நிரனிறை. இப்பொருள்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றையே உண்ண, மன்மதன் கணைகள் ஐந்தும் என் உயிர் ஒன்றையே உண்ணுகின்றன. வானமே வடிவாகும். அண்டகோளமே மவுலி; மவுலி - முடி. மலையெட்டும் புயம். “வேத மொழிவிசும்பு மேனி சுடர்விழிமண், பாதந்திருப்பா திருப்புலியூர் - நாதர், பரமாம் பரமாம் படுகடலெண்டிக்கும், கரமா மவர்க்குயிர்ப்பாங் கால்” (திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், 2.)
678. சின்ன இடையையுடைய உமாதேவியாரை ஒரு பாகத்திலுடையாய்; திரிபு நோக்கிப் பகரம் மிக்கது. “பொறுத்த சின விடையாரும் பொருந்துசின விடையாரும்” (அருணைக். 71). தம் திரு விழிகள் செந்தாமரையைப் போன்ற திருமாலாகிய இடபத்தைச் செலுத்துவோய்.
679. தோழி கூற்று.
|