கலிவிருத்தம் 689. | என்ப ணிக்கும் பணியென் றிரந்தபோ | தென்ப ணிக்கும் பணிதிக்கு மேக்கென்றார் | என்ப ணிக்கும் பணியா விருந்ததோர் | என்ப பணிக்குமின் பாமகி லேசர்க்கே. | | | |
நேரிசை வெண்பா 690. | கேயூர மூரக் கிளர்தோ ளகிலேசர் | மாயூர மூருமொரு மைந்தற்குத் - தீயூரும் | அவ்வேலை யீந்தா ரடித்தொழும்பு செய்தொழுகும் | | | | |
மறுத்துணரும் வழி வாமபாகத்தின் இடையில் இல்லையென்பது உண்டென்ற பொருளும் தோற்றியது. ஓர் மருங்கிலே எவ்வறங்களும் உண்டு - இடப்பாகமாகிய ஒரு பக்கத்தில் எல்லா அறங்களும் அமைந்தன. உமாதேவியார் முப்பத்திரண்டு அறங்களும் வளர்த்தமையைக் கூறியது. எழுதருங் கூற்றமே கொல்லுகின்றது - எழுந்து வருகின்ற யமனே கொல்லப்படுவது. கூறு மாற்றம் எழுதருங் கூற்றமே - இறைவர் திருவாய்மலர்ந்தருளும் வார்த்தை எழுதுதற்கு அரிய வேதமே. வில்லும் ஏற்றிடும் நாணும் பொன்னாகமே - வில்லாக உள்ளதும் அதன்கண் ஏற்றிடும் நாணும் பொன்னாகமே; பொன் நாகம் - பொன்மலையாகிய மேரு, பொலிவுபெற்ற ஆதிசேடனாகிய பாம்பு. விடு கணைக்கு நாணும் பொன் ஆகம் உண்டு - விடுகின்ற அம்பாகிய திருமாலுக்கு நாணுகின்ற திருமகள் திருமார்பில் உள்ளாள். மல்லல் மார்பில் மணிமுத்தம் என்பதே - வளப்பமுடைய திருமார்பில் மணியாகவும் முத்தாகவும் இருப்பது என்பே; அது: பகுதிப் பொருள் விகுதி. ஐயர்க்கு வாசம் அவிமுத்தம் என்பதே; வாசம் - இருப்பிடம்; அவிமுத்தம் - காசி; என்பது - என்று சிறப்பிக்கப்படுவது.
689. பணிக்கும் பணி என் என்று இரந்தபோது - தேவரீர் இடும் கட்டளை யாது என்று இரந்தபோது,. என் - அருள்செய்வது யாது? பணிக்கும் - பாம்புக்கும். பணிதிக்கு மேக்கு என்று - ஆபரணத்திற்கு மேலானதென்று. ஆர் - நிறைந்த. என்பு அணிக்கும் - என்பாகிய ஆபரணத்திற்கும். பணியா இருந்ததோர் என் பணிக்கும் - பணிந்து இருந்த எனது தொண்டிற்கும். (பி-ம்.) ‘பணியாயிருந்ததோர்’. இன்பாம் - உவப்பை அடைகின்ற. பணிக்கும் அணிக்கும் பணிக்கும் இன்பாம் அகிலேசர்க்குஎன்.
690. கேயூரம் - வாகுவலயம். கிளர் - எழிச்சிபெற்ற. அகிலேசர்: எழுவாய். மாயூரம் - மயில். மைந்தன் - முருகக் கடவுள்; அ வேலை - அந்த வேற்படையை. இ வேலை - இந்தப் பணியை.
|