பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்51

தானைக் கடலொடு பொலியுந் திருமகள்
   தாலோ தாலேலோ
சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி
   தாலோ தாலேலோ.    
(7)

31.
அமரர்க் கதிபதி வெளிறக் களிறெதிர்
   பிளிறக் குளிறியிடா
அண்ட மிசைப்பொலி கொண்ட லுகைத்தடும்
   அமரிற் றமரினொடும்

கமரிற் கவிழ்தரு திசையிற் றலைவர்கள்
   மலையிற் சிறகரியும்     
கடவுட் படையொடு பிறகிட் டுடைவது     
   கண்டு முகங்குளிராப்     

பமரத் தருமிலர் மிலையப் படுமுடி    
   தொலையக் கொடுமுடிதாழ்    
பைம்பொற் றடவரை திரியக் கடல்வயி    
   றெரியப் படைதிரியாச்    

    (4) தானைக் கடல் - சேனா சமுத்திரம்.

    31. இதில் உக்கிரகுமாரபாண்டியருடைய வெற்றிச் செயல்கள் கூறப்படும்.

    (அடி, 1) வெளிறு அக்களிறு - ஐராவதம். குளிறியிடா - முழங்கி. (பி-ம்.) ‘உகைத்திடும்.’

    2. கமர் - வெடிப்பு. திசையிற் றலைவர்கள் - திக்குப் பாலகர்கள்; இவர்கள் இந்திரன் படைத்தலைவராய் வந்தவர்கள். மலையிற் சிறகரியும் கடவுட் படை - இந்திரனது சேனை; கடவுள் படையென்றது ஓசை நோக்கி விகாரமாகி நின்றது. முகம் குளிரா - முகம் குளிர்ந்து. (பி-ம்.) ‘குளிரப்’.

    (3) பமரம் - வண்டு. தருமலர் - கற்பகத்தின் மலர். மிலையப்படும். முடி - மிலையும்முடி; என்றது இந்திரனது முடியை; மிலைதல் - சூடுதல். (பி-ம்.) ‘மலையப்’. பைம்பொற்றடவரை - மேருமலை. படைதிரியா - ஆயுதத்தைச் சுழற்றி எறிந்து. இந்திரன் முடிமேல் வளையையும், மேருமலையின் மேற்செண்டையும், கடலில் வேலையும் விட்டனர்.