பக்கம் எண் :

510குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

நேரிசை வெண்பா
693.
வேதத் துரகர் விரக ரகிலேசர்
பாதத் துரகப் பரிபுரத்தார் - நாதரிவர்
சேவடிக்கண் டாரே திறம்பிழைத்துத் தென்புலத்தார்
கோவடிக்கண் டாரே குலைந்து.    
(95)

கட்டளைக் கலித்துறை
694.
குலைவளைக் கும்பழுக் காய்முழுத்
    தாறு கொழுங்கமுகின்
தலைவளைக் கும்பொழிற் காசிப்
    பிரான்றடங் கோட்டுப்பைம்பொன்
மலைவளைக் கும்புயத் தாண்மையென்
    னாந்தெவ் வளைந்துகழைச்
சிலைவளைத் துத்தன் படைவீ
    டமர்க்களஞ் செய்திடினே.     
(96)

ஆசிரியவிருத்தம்
695.
இடம ருங்கினின் மருங்கி லாதவவள்
    குடியி ருக்கவு முடியில்வே
்தியை ரிருத்தி வைத்துமதி
    மோக மோகினியி னுருவமாய்
நடமி டுங்கிவடன் மேலும் வைத்துள
    நயந்தொர் பிள்ளை பயந்தநீர்
வை மருவி னின்றுபிறர்
    நாவ ளைக்கவிட மாகுமோ

    693. வேதத்துரகர் - வேதமாகிய குதிரையை யுடையவர் (683). விரகர் - நுண்ணறிவையளிக்கும் தலைவர். (பி-ம்.) ‘விரகவகிலேசர்’. பாதத்து உரகப் பரிபுரத்தார் - திருவடிகளில் பாம்பாகிய சிலம்பை அணிந்தவர். சேவடிக் கண்டாரே - திருவடியைத் தரிசித்தவர்களே; திரிபு நோக்கிக் ககரம் மிக்கது. திறம் பிழைத்து - யமனது வன்மைக்குத் தப்பி. தென்புலத்தார் கோ - யமன்; அடி - தண்டம்; முன்னும், “கூற்றடி” (687) என்றார். அண்டார் - நெருங்கார், யம தண்டனை இல்லையென்றபடி.

    694. பழுக்காய்த்தாறு - பாக்குக்குலை; ஆண்மை என் ஆம் - வீரம் என்ன பயனுடையதாகும். தெவ் வளைந்து - பகைவன் சூழ்ந்துகொண்டு; பகைவனென்றது மன்மதனை. கழைச்சிலை - கரும்பாகிய வில்லை. தன் படை வீடு - தமது படைவீடாகிய காசியை; 613, 648-ஆம் செய்யுட்களைப் பார்க்க. தன்னென்றது சிவபிரானை. தம்முடைய படைவீட்டைப் பகைவன் வந்து அமர்க்களமாகச் செய்வானெனின், இவர் ஆண்மை என்ன பயனுடையதாம்.