பக்கம் எண் :

காசிக் கலம்பகம்511

குடமு டைந்ததெ னவானி னங்கண்மடி
மடைதி றந்துபொழி பாலொடும்
கொழும டற்பொதி யவிழ்ந்து கைதைசொரி
சோறு மிட்டணி திரைக்கையாற்
கடல் வயிற்றினை நிரப்பு கின்றசுர
கங்கை குண்டகழி யாநெடுங்
ககன நீள்குடுமி மதில்க ளேழுடைய
காசி மேவுமகி லேசரே.    
(97)


பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
696.
சரியோ டொழுகுங் கரவளையே சரக்கோ டொழுகுங் கரவளையே
  தையற் கனமே தீவிடமே தவழுங் கனமே தீவிடமே
சொரிவ தடங்காக் கண்ணீரே துளிக்குந் தடங்காக் கண்ணீரே
  துயரே வதித னந்தினமே சூரற் கழுத்தி னந்தினமே
கருகிப் புலர்ந்த நாவாயே கரைவந் திழியு நாவாயே
  கண்க ளுறங்கா கழுநீரே கடலே கழியே கழுநீரே
அரிவை யிவளுக் குருகீரே யனத்தோ டுறங்குங் குருகீரே
  அளியா ரிதழி வனத்தாரே யருளானந்த வனத்தாரே.    
(98)

    695. தோழி கூற்று.

    இடமருங்கினில் - இடப்பாகத்தில். மருங்கு இலாதவவள் - இடையில்லாத உமாதேவியார். இவளொருத்தியென்றது கங்கையை. நடமிடு இங்கு இவளென்றது திருமாலாகிய மோகினியை. ஓர் பிள்ளை - மகாசாத்தர். நாவளைக்க - பேச; பழிகூற வென்னும் பொருளில் இங்கே வந்தது. இவ்வளவு பெண்களை மருவிய நீர் இவளையும் ஏற்றுக்கொண்டாற் பிறர் பழி கூறுவதற்கு என்ன காரணம் உள்ளது? பசுவின் மடிக்குக் குடம் உவமை; குடஞ் சுட்டு என்று இத்தகைய பசுக்கள் கூறப்படும். மடிமடை - மடியாகிய மடை. கைதை - தாழை. சோறு - தாழை மடலினுள்ளே இருக்கும் ஒரு பொருள்; உண்ணும் சோறெனவும் ஒருபொருள் தோற்றியது. பாலோடு சோறும் இட்டுக் கடல் வயிற்றினை நிரப்புகின்ற. குண்டு அகழியா - ஆழமான அகழியாக. ககனம் - ஆகாயத்தில். குடுமி - உச்சி. அகிலேசரே, நீர் நங்குலத்திருவை மருவின் பிறர்நாவளைக்க இடமாகுமோ? இஃது, ‘இப்பொழுது அவர் மிக்கது’ என்பதைக் குறிப்பித்தது.

    696. தோழி கூற்று.

    கரவளை சரியோடு ஒழுகும் - கைவளை சரியோடு நழுவும்; சரி - முழங்கைக்குமேல் அணிந்துகொள்ளும் ஒருவகை வளை. சரக்கோடு ஒழுகும் கரவளையே - பலவகைப் பண்டங்களோடு நீரீல் செல்லா நிற்கும் தோணியே. தையற்கு அனம் தீ விடமே - தலைவிக்குச் சோறு கொடிய