சந்த விருத்தம் 697. | வனத்தினுமொர் பொற்பொதுமு கப்பினு நினைப்பவர் | மனத்தினுந டித்த ருள்செய்வார் | சினக்கயல் விழிக்கடை கருக்கொள்கருணைக்கொடி | திளைத்தமரு மத்த ரிடமாம் | நனைக்கமல நெக்குடை தரக்குடை துறைச்சுர | நதிக்கரையின் முட்டை கொலெனாக் | கனத்தபரு முத்தினை யணைத்தன மினத்தொடு | | | | | | | | |
வேறு 698. | கருமுகில் வெளுப்பவற விருளுமள கத்தினிவள் | கதிர்முலை முகட்டணைய வணைமீதே | வருகில ரெனிற்செவியி லொருமொழி சொலச்சமயம் | வருகென வழைக்கினுடன் வருவார்காண் | | | |
விடமாயிற்று. தவழும் கனமே - வானத்தில் உலவும் மேகமே. தீவு இடமே - தீவுகளாகிய இடங்களே. சொரிவது அடங்காக் கண்ணீரே. தடங்காவிலே துளிக்கும் கள்ளாகிய நீரே; கா - சோலை; கள் - தேன். துயரே வதிதல் நந்தினமே - துயரத்தின்கண்ணே தங்குதல் பெருகினேம். சூரல் கழுத்தின் நந்து இனமே - சுழித்தலையுடைய கழுத்தைப் பெற்ற சங்கின் கூட்டமே; சூரல் - சுழித்தல்; “சூரலங் கடுவளி” (அகநா. 1). நாவும் வாயும் கருகிப் புலர்ந்த; புலர்ந்த - உலர்ந்தன; முற்று. கரையில் வந்து இழியும் நாவாயே; நாவாய் - ஓடம். கண்கள் உறங்கா - கண்கள் தூங்குதலைச் செய்யா. நீர் கழும் - நீர் அவற்றைக் கழுவும்; அழுவேனென்றபடி. கழுநீரே - கழுநீர்ப் பூக்களே. குருகீரே - பறவைகளே. இதழி வனத்தார் அளியார் - கொன்றை மலராலாகிய அழகிய மாலையைத் தாரார். ஆனந்த வனத்தார் அளியார்.
697. வனத்தினும் - மயானத்திலும். பொற்பொது - பொன்னம் பலம். விழிக்கடையின்கண்ணே கருக்கொண்ட கருணையையுடைய கொடிபோல்வாள்; உமாதேவியார். அத்தர் - ஒரு பாதியையுடையவர்; அர்த்தரென்பது அத்தரென நின்றது. திளைத்த எனப் பெயரெச்சமாகப் பிரித்து, மருமத்த ரென்பதற்கு மார்பினை யுடையவரெனப் பொருள் கொள்ளலுமாம்; “பெண்ணுறு மார்பினர்” (தே. திருஞா.) நெக்கு - நெகிழ்ந்து. உடைதர - மலர. சுரநதி - கங்கை. அன்னம் முத்தை முட்டையென்று நினைத்து அணைத்தது (603). அவிமுத்தநகர் இடமாம் என்க.
698. தோழி கூற்று.
|