பக்கம் எண் :

காசிக் கலம்பகம்513

சுரநதி சுருட்டும்விரி திரைகளொரு முத்திமக
    டுணைமுலை திளைக்குமவர் மணநாளின்
முரசொடு முழக்குகுட முழவென விரைக்கவளை
    முரலுமவி முத்தநக ருடையாரே.    
(100)

நேரிசை யாசிரியப்பா
699.
உடைதிரைக் கங்கை நெடுநதித் துறையின்          
வலம்புரி யென்னவாங் கிடம்புரி திங்கள்
வெள்ளிவீ ழன்ன விரிநிலாப் பரப்பும்
பொன்வீ ழன்ன புரிசடைக் கடவுள்
5.
முடவுப் படத்த கடவுட் பைம்பூண்
கறங்கெனச் சுழலுங் கால்விசைக் காற்றா
துமிழ்தரு குருதித் திரடெறித் தாங்குத்
திசைதொறுந் தெறித்த திரண்மணிக் குலங்கள்

    அற - மிக. அளகம் - கூந்தல். கூந்தலின் கருமையை நோக்கக் கருமேகமும் வெண்மையாகத் தோன்றுமென்றாள். முகடு - உச்சி. அணை - படுக்கை. ஒரு மொழி சொல - பிரணவத்தை உபதேசிக்க. சமயமென்பது மரணசமயத்தை. இவளை அணைய வருகவென்பாருக்கு வாராரென்று சிலர் சொல்வரேல், இவள் உயிர் விடுஞ் சமயமெனின் தம் வழக்கத்தினின்றும் மாறாதிருப்ப, உடனே பிரணவோபதேசம் புரிய எழுந்தருளுவர். சுரநதி - கங்கை. அலைகளின் ஒலிக்குக் குடமுழவின் ஓசை உவமை. திரைகள் இரைக்க. வளை முரலும் - சங்குகள் முழங்கும். “பறைபடப் பணில மார்ப்ப” (குறுந். 15). மணம் புரிதல் மரபாதலின் குடமுழவையும் வளையையும் ஒருங்கே கூறினர்.

    699. இறைவனைத் துதித்தல் அவனது அருளைப் பெறுதற்கு வழி என்பர்.

    (அடி, 2-3) வலம்புரிச்சங்கம் சந்திரனுக்கு உவமை. இடம்புரி - இடத்தை விரும்பிய. வெள்ளிவீழ் - வெள்ளியாலாகிய விழுது; இது நிலாவுக்கு உவமை.

    (3-4) நிலாப்பரப்பும் சடை, பொன்வீழன்ன சடை யென்க.

    (5-11) சிவபெருமான் நடனம் புரிகையில் அவர் ஆபரணமாக அணிந்த பாம்பினிடத்திலிருந்து மணிகள் சிதறித் திசைக் களிறுகளின்மேல் தாக்க அவை வீரிட்டன.

    (5) முடவு - வளைவு. படத்தையுடைய பூண்; பாம்பு.

    (6) கறங்கு - காற்றாடி. கால்விசை - திருவடியின் வேகம்.

    (7-8) மாணிக்கங்களுக்கு இரத்தத் துளிகள் உவமை.