பக்கம் எண் :

514குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

வானேறு கடுப்ப வெரிநிற் றாக்கலும்
10.
கையெடுத் தெண்டிசைக் களிறும் வீரிடத்
தெய்வநா டகஞ்செய் வைதிகக் கூத்தன்
வரைபகப் பாயும் வானரக் குழாத்தொரு
கருமுக மந்தி கால்விசைத் தெழுந்து
பழுக்காய்க் கமுகின் விழுக்குலை பறித்துப்
15.
படர்தரு தோற்றஞ் சுடரோன் செம்மல்
தெசமுகத் தொருவன் றிரண்முடி பிடுங்கி
விசையிற் பாய்ந்தென விம்மிதம் விளைக்கும்
தடமலர்ப் படப்பைத் தண்டலைக் காசிக்
கடிநகர் புரக்குங் கண்ணுதற் செல்வன்
20.
வேம்புங் கடுவுந் தேம்பி ழி யாகச்
செஞ்செவி கைப்பயான் றெரித்த சின்மொழி
அஞ்செவி மடுத்தாங் களித்தன னதனால்
வேத்தவை வியப்ப விரைத்தேன் பில்கும்

    (9) வானேறு - இடி. வெரிநில் - முதுகில்.

    (10) வீரிட - முழங்க.

    (12-18) கமுகின் குலையைப் பறித்து இறக்கும் மந்திக்கு இலங்கையின் உத்தர கோபுரத்திலிருந்த இராவணனது பத்து முடிகளையும் பறித்து வந்த சுக்கிரீவன் உவமை.

    (14) பழுக்காய் - பாக்கு.

    (15) சுடரோன் செம்மல் - சூரியன் மகனாகிய சுக்கிரீவன்.

    (16) தெசமுகத்தொருவன் - இராவணன்.

    (17) விம்மிதம் - வியப்பு.

    (18) படப்பை - தோட்டக்கூறு. தண்டலை - சோலை.

    (20-21) என்னுடைய சொற்களை நோக்கும்போது கைப்புடைய வேப்பம்பழமும் கடுக்காயும் தேனைப்போல விரும்பத் தக்கனவாகு மென்றபடி.

    (20) வேம்புங் கடுவும்: தொல். செய். 112.

    (4-22) புரிசடைக் கடவுள், வைதிகக் கூத்தன், கண்ணுதற் செல்வன் சின்மொழியைச் செவிமடுத்து அளித்தனன்.

    (23-4) வேத்தவை - அரசரது சபைகள். தேத் தமிழ் - தேன் போன்ற இனிமையையுடைய தமிழ். செந்நாப் புலவீர் - செவ்விய நாவையுடைய புலவர்களே.