பக்கம் எண் :

516குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

சகலகலாவல்லி மாலை

கட்டளைக் கலித்துறை
700.
வெண்டா மரைக்கன்றி நின்பதந்
   தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ
   லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித்
   தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே
   சகல கலாவல்லியே.    
(1)

701.
நாடும் பொருட்சுவை சொற்சுவை
    தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள்
    வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே
    கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே
    சகல கலாவல்லியே.    
(2)

     குறிப்பு: இப்பிரபந்தத்தின் பெயர். ‘சகல கலாவல்லிமாலை யென்னும் சரசுவதி தோத்திரம்’ என்றும் வழங்கும்.

    700. வெள்ளையுள்ளம் - அறிவின்மையையுடைய மனம். வெண்டாமரையில் நீ எழுந்தருளியிருத்தல் போல அடியேனது வெள்ளையுள்ளத்திலும் எழுந்தருளுதல் தக்கதே யென்றபடி. அளித்துண்டான் - திருமால். அளித்து - பாதுகாத்து; உறங்க - தூங்கிக் கிடப்ப: செயலற்றிருப்பவென ஒரு பொருள் தோற்றியது, ஒழித்தான் - சிவபெருமான். பித்தாக - பித்தனாக. கண்டான் - பிரமன். அவனுக்கு உயர்வு தோற்றும்படி இதன் கண் சொல்லமைதி இருத்தல் காண்க. சகலகலாவல்லி - கலைமகள்.

    701. தோய்தர - பொருந்த. நாற்கவி - வெண்பா முதலிய நான்கு; ஆசு மதுரம், சித்திரம், வித்தாரமென்னும் நான்குமாம். பாடும்பணி - பாடுகின்ற பணிவிடை; “பாடும் பணியே பணியாவருள்வாய்”