பக்கம் எண் :

சகலகலாவல்லி மாலை517

702.
அளிக்குச் செழுந்தமிழ்த் தெள்ளமு
   தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ
   லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர்
   கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே
   சகல கலாவல்லியே.    
(3)

703.
தூக்கும் பனுவற் துறைதோய்ந்த
   கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்
   வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந்
   தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே
   சகல கலாவல்லியே.    
(4)

(கந்தரநுபூதி, 1). கொடியிலே மலர் இருத்தல் இயல்பாயிருப்ப, மலரிலே கொடியுள்ளதென்றது ஒரு நயம். பங்கயமாகிய ஆசனத்தில், ஐம்பாற் காடு - கூந்தலாகிய காடு; “குழற்கா டேந்துமிள வஞ்சிக் கொடியே” (62).

    702. அளிக்கும் - நின்னால் அருளப்பெறும். தமிழாகிய தெளிந்த அமுதத்தை நிறைய உண்டு; “தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான, முத்திக் கனியேயென் முத்தமிழே” (தமிழ்விடு. 69). குளித்து உண்ணுதல் முறையாக இருப்ப, உண்டு குளித்தலை விரும்பியது ஒரு நயம்; ஆர்ந்தென்பதனை ஆரவென்னும் எச்சத்தின் திரிபாகக் கொள்ளினும் பொருந்தும். உளங்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் - கருத்தால் ஆராய்ந்து மிகத் தெளிந்து செய்யும் செய்யுட்களையுடைய; “உளங்கொண்டு தொண்டர், தீட்டுங் கலைத் தமிழ்” (706) என்பர் பின்னும். கவியாகிய மழை. கலாபம் - தோகை. மழை பெய்ய மயில் களித்தல் இயல்பு.

    703. தூக்கும் - ஆராயும். பனுவல் துறை - தமிழ் நூல்களின் பாகுபாடுகள்; “தீந்தமிழின், துறைவாய் நுழைந்தனையோ” (திருச்சிற். 20). கல்வியென்றது நூல்களைக் கற்றுப்பெறும் செயற்கை அறிவு; வாக்கென்றது புண்ணிய வசத்தால் எளிதிற் கவியியற்றும் ஆற்றலாகிய இயற்கை அறிவு; “வாக்கிற்கருணகிரி” (தனிப்.).