704. | பஞ்சப் பிதந்தரு செய்யபொற் | பாதபங் கேருகமென் | நெஞ்சத் தடத்தல ராததென் | னேநெடுந் தாட்கமலத் | தஞ்சத் துவச முயர்த்தோன்செந் | நாவு மகமும்வெள்ளைக் | கஞ்சத் தவிசொத் திருந்தாய் | | | | | | | | |
705. | பண்ணும் பரதமுங் கல்வியுந் | தீஞ்சொற் பனுவலும்யான் | எண்ணும் பொழுதெளி தெய்தநல் | காயெழு தாமறையும் | விண்ணும் புவியும் புனலுங் | கனலும்வெங் காலுமன்பர் | கண்ணுங் கருத்து நிறைந்தாய் | | | | | | | | |
704. பஞ்சை அப்பிய பாதம், இதந்தரு பாதம், செய்ய பாதம், பொற் பாதமென்க. பஞ்சு - செம்பஞ்சுக் குழம்பு. பங்கேருகம் - தாமரை. பாதபங்கேருகம் என் நெஞ்சமாகிய தடாகத்தில் மலராததற்குக் காரணம் யாது? நெடுந்தாட் கமலத்திலுள்ள. அஞ்சத்துவசம் உயர்த்தோன் - பிரமதேவன்; அஞ்சம் - அன்னப்பறவை. அகமும் - அவனுடைய மனத்திலும். தவிசு - ஆதனம். 705. பண்ணென்றது இங்கே இசைத்தமிழைக் குறித்து நின்றது. பரதமென்றது நாடகத் தமிழை. கல்வி - நூலறிவு. தீஞ்சொற் பனுவல் - இனிய சொல்லமைதியையுடைய கவி. முத்தமிழ்க் கல்வியும் கவித்துவமும் வேண்டுகின்றார். கந்தர் கலிவெண்பாவிலும் இவற்றை வேண்டினார். வேதத்தாற் கூறப்படும் பொருளும் ஐம்பூதங்களினூடே இருப்பவளும் அன்பர்கள் காட்சிக்கும் தியானத்திற்கும் எளிவந்தவளும் ஆவதைக் கூறியபடி.
|