708. | சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் | ஞானத்தின் றோற்றமென்ன | நிற்கின்ற நின்னை நினைப்பவர் | | | | |
709. | மண்கண்ட வெண்குடைக் கீழாக | மேற்பட்ட மன்னருமென் | பண்கண் டளவிற் பணியச்செய் | வாய்படைப் போன்முதலாம் | விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் | | | | | | |
சகலகலாவல்லி மாலை முற்றிற்று.
708. சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராக இருக்கும் உண்மையறிவு. அவ்வறிவே உருவாக இருப்பவள் கலைமகள். நின்னை நினைப்பவர் யார் - நின்னை நினைக்கும் ஆற்றலுடையவர் யார்; நீ மனத்தால் நினைத்தற்கு அரியா யென்றபடி. துதிக்கை நிலந் தோய்தல் பிடிக்கு உத்தம இலக்கணம்; “ஈர்ந்துநிலந்தோயு மிரும்பிடித் தடக்கையின்” (சிறுபாண். 19). (பி-ம்.) ‘பதாம்புயத் தாளே.
709. இப்பாட்டில் பாதுஷாவின் அன்பு தமக்குக் கிடைக்க வேண்டுமென்னும் விருப்பத்தைக் குறிப்பித்தனர்.
மண்கண்ட - உலகு முழுவதையும் நிழற்றிய. பண்ணென்றது இங்கே செய்யுளை. படைப்போன் - பிரமதேவர். கண்கண்ட தெய்வம் - பிரத்தியட்சமான பலனைத் தரும் தெய்வம்.
|