இரட்டை மணிமாலை
நேரிசை வெண்பா 1. | கார்பூத்த கண்டத்தெங் கண்ணுதலார்க் கீரேழு | பார்பூத்த பச்சைப் பசும்கொம்பே - சீர்கொள் | கடம்பவனத் தாயேநின் கண்ணருள்பெற் றாரே | இடம்பவனத் தாயே யிரார். | | | |
கட்டளைக் கலித்துறை 2. | இராநின் றதுஞ்சொக்க ரெண்டோள் | குழைய விருகுவட்டாற் | பொராநின் றதுஞ்சில பூசலிட் | டோடிப் புலவிநலம் | தராநின் றதுமம்மை யம்மண | வாளர் தயவுக்குள்ளாய் | வராநின் றதுமென்று வாய்க்குமென் | னெஞ்ச மணவறையே. | | | | | | | |
நேரிசை வெண்பா 3. | மதம்பரவு முக்கண் மழகளிற்றைப் பெற்றுக் | கதம்பவனத் தேயிருந்த கள்வி - மதங்கன் | அடியார்க் குடம்பிருகூ றாக்கினாள் பார்க்கிற் | கொடியார்க் குளகொல் குணம். | | | |
1. கடம்பவனத்தாயே - கடம்பவனமாகிய மதுரையில் எழுந்தருளிய அன்னையே. இடம்ப வனத்தாய் இரார் - டம்ப மிகுதியின் கண்ணே உள்ளவராய் இரார்; டம்பம் பன்னிரண்டு குற்றங்களுள் ஒன்று.
2. இரு குவடு - நகில்கள். அம்மே, நீ நின் கணவரோடு புரியும் திருவிளையாடல்களை என்மனம் எப்பொழுதும் நினைக்கும்.
3. மழகளிறு - விநாயகர். மதங்கன் அடியார்க்கு - பாண பத்திரருக்கு அடியாராகிய சிவபெருமானுக்கு; சொக்கநாதர் பாணபத்திரரின் பொருட்டு விறகு விற்றதை நினைந்து கூறியது இது. தவஞ்செய்து இறை
|