கட்டளைக் கலித்துறை 4. | குணங்கொண்டு நின்னைக் குறையிரந் | தாகங் குழையப்புல்லி | மணங்கொண் டவரொரு வாமங்கொண் | டாய்மது ரேசரவர் | பணங்கொண் டிருப்ப தறிந்துங்கொள் | ளாயம்மை பைந்தொடியார் | கணங்கொண் டிறைஞ்சு நினக்குமுண் | டாற்பொற் கனதனமே. | | | | | | | |
நேரிசை வெண்பா 5. | கனமிருக்குங் கந்தரரர்க்குன் கன்னிநா டீந்தென் | தினமிரப்ப தோவொழியார் தேனே - பனவனுக்காப் | பாமாறி யார்க்குனைப்போற் பாரத் தனமிருந்தாற் | றாமாறி யாடுவரோ தான். | | | |
கட்டளைக் கலித்துறை 6. | தானின் றுலகு தழையத் தழைந்த தமிழ்மதுரைக் | கானின்ற பூங்குழற் கர்ப்பூர வல்லி கருங்கட்செய்ய | மீனின் றுலாவி விளையா டுவதுவிண் ணாறலைய | வானின்ற தோர்வெள்ளி மன்றாடு மானந்த மாக்கடலே. | | | |
வரது வாமபாகத்தைப் பெற்றமையால் உடம்பிரு கூறாக்கினாள் என்றார். கொடியார் - கொடி போன்றவர், கொடியவர்; “எற்றே கொடிமுல்லை தன்னை வளர்த்தெடுத்த, முற்றிழையாள் வாட முறுவலிக்கும் ............. கொடியார்க்கு முண்டோ குணம்” (தண்டி, 48, மேற்.) (பி-ம்.) ‘கொடியார்க்கிலை’.
4. மணங் கொண்டவர் - சிவபிரான். பணம் - பாம்பின் படம், திரவியம். கொள்ளாய் - வாங்கிக்கொள்ளமாட்டாய். பொற்கனதனம் - பொலிவுபெற்ற கனத்த நகில், பொன்னாகிய மிக்க செல்வம்.
5. கனம் - மேகத்தின் கரியநிறம். கந்தரர் - திருக்கழுத்தையுடைய கடவுள். கன்னிநாடு - பாண்டிநாடு. ஈந்து என் - நீ கொடுத்ததனால் உண்டான பயன் யாது? பனவனுக்கா பா மாறியார் - தருமியென்னும் பிராமணனுக்காகத் தம் பாட்டை விற்றவர். தனம் - நகில், பொருள், மாறி ஆடுவரோ - கால் மாறி ஆடுவரோ. பணமில்லாமையே அவர்க் கூத்திற்குக் காரணமென்றார்.
|