பக்கம் எண் :

534குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

பிள்ளைதனக் கெண்ணெயிலை யரைக்குமொரு
     துணியிலையென் பிறகே வந்த
கள்ளிதனைக் கொண்டவன்றே குறவனுக்கு
     மெனக்குமிலை கஞ்சி தானே.

            எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
21.
கூடல்புன வாயில்கொடுங் குன்றுபரங் குன்று     
    குற்றால மாப்பனூர் பூவணநெல் வேலி
ஏடகமா டானைதிருக் கானப்பேர் சுழிய
    லிராமேசந் திருப்புத்தூ ரிவைமுதலாந் தலங்கள்
நாடியெங்க ளங்கயற்கண் ணாண்டதமிழ்ப் பாண்டி
    நன்னாடும் பிறநாடு மென்னாட தாகக்
காடுமலை யுந்திரிந்து குறிசொல்லிக் காலங்
    கழித்தேனென் குறவனுக்குங் கஞ்சிவாரா தம்மே.

22.
பொற்றொடிவள் ளிக்கிளைய பூங்கொடியென் பாட்டி
  பூமகண்மா யவன்மார்பிற் பொலிவளென்று சொன்னாள்
மற்றவள்பெண் களிலெங்கள் பெரியதாய் கலைமான்
  மலரயனார் திருநாவில் வாழ்வளென்று சொன்னாள்
பெற்றவெங்க ணற்றாயுஞ் சுந்தரியிந் திரன்றோள்
  பெறுமென்றாள் பின்னெங்கள் சிறியதா யம்மே
சொற்றகுறிக் களவிலையெங் கன்னிமா ரறியச்
  சொன்னேன்பொய் யலநாங்கள் சொன்னதுசொன் னதுவே.

    21. கொடுக்குன்று - பிரான்மலை. கானப்பேர் - காளையார் கோயில். “கூடல் புனவாயில்” என்ற வெண்பாவிற் காணப்படும் பாண்டி பதினாலு தலங்களும் இதிற் கூறப்பட்டன. குறவனென்றது தன்கணவனை.

    22. தன் சுற்றத்தினர் சொல்லிய குறிகள் பலித்த வரலாறுகளைக் கூறுகின்றாள்.

    பூமகள் - திருமகள். அவளென்றது தன்பாட்டியை, கலைமான் - சரசுவதி. சுந்தரி - இந்திராணி. கன்னிமார்: 11. சொன்னது சொன்னதுவே - சொன்ன குறிகள் மாறாமற் பலிக்கும்; இஃது உலக வழக்கு.