பக்கம் எண் :

மதுரை மீனாட்சியம்மை குறம்535

23.
முன்னொருநா ளம்மைதடா தகைபிறந்த நாளின்
முகக்குறிகண் டிவளுலக முழுதாளு மென்றேன்
பின்னொருநாள் கைக்குறிபார்த் தம்மையுனக் கெங்கள்
பிஞ்ஞகர்தா மணவாளப் பிள்ளையென்று சொன்னேன்
அன்னையவண் மெய்க்குறிக ளனைத்தையும்பார்த் துனக்கோ
ராண்பிள்ளை யுண்டுபிறந் தரசாளு மென்றேன்
சொன்னகுறி யெல்லாமென் சொற்படியே பலிக்கும்
தொகுத்துநீ நினைத்தகுறி யினிச்சொலக்கே ளம்மே.

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
24.
ஒருகாலங் கஞ்சியுமென் குஞ்சுதலைக்
   கெண்ணெயுமோ ருடுப்பு மீந்தாற்
பொருகால வேற்கண்ணாய் மனத்துநீ
   நினைத்தவெலாம் புகல்வன் கண்டாய்
வருகால நிகழ்காலங் கழிகால
   மூன்றுமொக்க வகுத்துப் பார்த்துத்
தருகாலந் தெரிந்துரைப்ப தெளிதரிதன்
   றெங்கள்குறச் சாதிக் கம்மே.

    எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
25.
குங்குமஞ்சந் தனக்குழம்பிற் குழைத்துத்தரை மெழுகிக்
    கோலமிட்டுக் குங்குலியக் கொழும்புகையுங் காட்டிச்
செங்கனக நவமணிக டிசைநான்கும் பரப்பித்
    தென்மேலை மூலைதனிற் பிள்ளையார் வைத்துப்
பொங்குநறு மலரறுகோ டைங்கரர்க்குச் சாத்திப்
    புழுகுநெய்வார்த் திடுவிளக்கு நிறைநாழி வைத்து
மங்கையருக் கரசியெங்க ளங்கயற்கண் ணமுதை
    மனத்துள்வைத்து நினைத்தகுறி யினிச்சொலக்கே ளம்மே.

    23. தான் கூறிய குறி பலித்த வரலாறுகளைக் கூறுகின்றாள்.

    பிஞ்ஞகர் - சிவபெருமான்.

    24. ஒருகாலம் கஞ்சி - ஒருவேளைக்கு ஆகும் கஞ்சி. என் குஞ்சு - என் குழந்தை. (பி-ம்.) ‘குஞ்சி தலைக்கு’. “பாலக னுச்சியி லெண்ணெய்வார் பழகிய தோர்கலை கொண்டுவா” (அரங்கக்கலம். 69). உடுப்பு - ஆடை. கழிகாலம் - இறந்தகாலம்.