பக்கம் எண் :

மதுரை மீனாட்சியம்மை குறம்537

29.
அம்மேநின் செங்கையைநின் கொங்கையில்வைத் ததுதா
   னபிடேகச் சொக்கருனை யணைவரென்ற குறிகாண்
இம்மேலைத் திகையினிற்கை யெடுத்ததுவு மவர்தாம்
   இன்றந்திப் பொழுதினில்வந் தெய்துவரென் றதுகாண்
கைம்மேற்கை கட்டியதுந் தப்பாம லுனக்குக்
   கைகூடு நீநினைத்த காரியமென் றதுகாண்
செம்மேனி மணிவயிற்றிற் கைவைத்த தினிநீ
   சிறுவர்பதி னறுவரையும் பெறுவையென்ற தம்மே.

  அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
30.
அங்கைத் தலத்துத் தனரேகை யளவில்
செல்வந் தருமுனது
செங்கைத் துடிதென் மதுரேசர் செம்பொற்
புயத்திற் சேர்க்குமால்
இங்கிப் படிபுத் திரரேகை யெவர்க்கு
மிலையிப் படிதோளில்
தங்கு மறுவங் கயற்கணம்மை தன்னோ
டிருக்கத் தருமம்மே.

சிந்து
31.
பொன்பொதியுந் துகிலெனவெண் புயலொடுதண் பனிமூடும்
தென்பொதிய மலையாட்டி பேரைச்சொல்லாய் பாடநான்.

    29. அபிடேகச் சொக்கர் - முடியை யணிந்த சொக்கர். கொங்கைக்குக் கிரீடத்தை உவமையாகக் கூறுதல் மரபாதலின் இங்ஙனம் குறி கூறினாள். மேலைத்திசை - மேற்குத்திக்கு. பதினறுவரைப்பெறுதல்: “ஒருத்தி யகமுடையான் சிந்தை, வரநடந்து பதினாறு பிள்ளிபெற்றே யகமகிழ்ந்தாள்” (தனிப்.) ‘பதினாறும் பெற்றுப் பெறுவாழ்வு வாழ’ என்பது ஒரு வழக்கு.

    30. தனரேகை - செல்வத்தைக் குறிக்கும் கோடு. துடி - தமருக ரேகை. மறு - மச்சம்.

    31-9. இவற்றில் அங்கயற்கண்ணியின் தசாங்கம் சொல்லப்படும்.

    31. புயலும் பனியும் துகிலுக்கு உவமை. மலையாட்டி - மலைக்கு உரியவள்.